Monday, June 7, 2010

தாங்கள் சமீபத்தில் விஜய் தொலைக்கட்சியில் நீயா நானா குழு விவாதத்தை கண்டிருக்கக்கூடும். ஆங்கில வழியில் கல்வி போதிக்கும் மெட்ரிக் பள்ளிகள் அப்பட்டமான வணிக நிறுவனங்களாக செயல்பட்டு வருவது அப்பள்ளிகளின் உரிமையாளர்களின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. மெட்ரிக் பள்ளிகளின் உரிமையாலர்களுள் ஒருவர் மட்டும் மக்கள் நலனில் அக்கறை உடையவராய் கட்டண உயர்வு கோரிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து மனித நேயம் உள்ளவராக நடந்து கொண்டார். ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நமது இந்திய சமூகத்தில் சமத்துவம் காணவேண்டுமெனில் அனைவருக்கும் தரமான கல்வி என்பது அடிப்படை உரிமையாக வேண்டும். அதற்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் அரசுடமை ஆக்கப்படவேண்டும். இந்தியா முழுவதும் தரம் மிக்க ஒரே பாடத் திட்டம் பள்ளிகளில் கொண்டுவரவேண்டும். அப்போது மட்டுமே எதிகால இந்தியா வளமான வலிமையான தேசமாக உருவெடுக்க முடியும். இதனை நமது பிரதமர் அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வர ஆவன செய்வார்களேயானால் எதிகால சந்ததியினர் போற்றுவர்.

No comments:

Post a Comment