Saturday, February 23, 2013

உயிரில்
உணர்வில்
நினைவில்
யாவுமாய்
கலந்திட்ட
உன்னை
பிரிவது
எங்ஙனம்..?
கட்புலனில்
பிரிந்தாலும்
நுண்ணுணர்வில்
உறையும் நீ
பிரிந்தால்
உடலும்
வீழாதோ
மண்ணில்
மடிந்து...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment