தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, February 12, 2013
ஆண் பிள்ளைகள் தாயிடத்தும் பெண் பிள்ளைகள் தந்தையிடத்தும் அதிக ஒட்டுதலோடு இருப்பார்கள் என்பது ஃப்ராய்ட் கூறும் உளவியல். மேலும் பண்புப் பதிவுகள் குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தப் படவேண்டியவை. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்ற கவிஞரின் வரிகள் இங்கே நினைவு கூரத் தக்கது. தாய் அன்போடும் பொறுப்போடும் வளர்க்கும் எந்த குழந்தையும் வழி தவறுவதில்லை என்பது நிதர்சன உண்மை.நல்ல ஆண்மகனை வளர்த்தெடுப்பதில் தாய்க்கு பெரும்பங்கு உண்டு என்பது மறுக்கமுடியாது. பெரும்பாலான குடும்பங்களில் தந்தை கண்டிப்பு காட்டுவதும் தாய் குறிப்பாக ஆண் பிள்ளைகளிடம் செல்லம் கொடுப்பதும் நடைமுறையில் காண்கிறோம்.ஆண் வழி தவறிப் போக தார்மீக நெறிகளற்ற வணிக நோக்குடைய ஊடகங்கள் மற்றும் வாழ்க்கைக் கல்வியை மனிதனை உருவாக்கும் கல்வியை பயிற்றுவிக்காத கல்வி முறை போன்றவையும் பிற காரணிகள். ஒரு தாயாக உங்கள் ஆண் குழந்தையின் உள்ளத்தைக் கட்டமைப்பதில் உங்களுக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்கமுடியும் அன்னையரே...?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment