Tuesday, March 12, 2013

காதல் தரும் போதையில்
மதி மயங்கி வீழ்ந்த எனை
நின் கொலுசொலி தெளிவிக்க
மந்திரப் புன்னகையில் மீண்டும்
கிறங்கிப் போனேன்..!!
மதுரசம் வழியும் நின்
விழிகள் என் உயிர் பருக
கள்ளுண்ட வண்டானேன்.

# கருங்குளம் மா.முருகன்

2 comments:

  1. கால் சலங்கை வரிகள் வெகுவாக கவர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் இரசனைக்கும் நன்றிகள் பல சகோதரி

      Delete