Wednesday, July 24, 2013

புத்தன் முகத்தில் மீண்டும் புன்முறுவலைக் காண்பதெப்போ...?






   

துரோகத்தின் துணை கொண்டு
ஒரு இனம் கருவறுக்கப் பட்டுவிட்டது.
தொப்புள் கொடி உறவில் பூத்த தன்னல பதவி
அது தரும் ஊழல் பெரும் பணம், அதிகாரம் எனும்
துர்நாற்ற மலர்களாய் தமிழக அரசியல் வாதிகள்
அத்துர்நாற்ற மலர்களை மாலையாக்கி அணிந்த
தேசத்தைப் பீடித்த அன்னியப் பிசாசு இவர்களின்
துரோகத்தில் விளைந்த ஆயுதம் கொண்டு
தமிழ் இனத்தைக் கருவறுத்த
புத்தனைப் பின்பற்றுவதாகப் பிதற்றும்
போலி அஹிம்சாவாதிகளின் மாபாதகம் கண்டு
புத்தனும் இழையோடும் மெல்லிய
புன்முறுவலைத் தொலைத்து விட்டான்.
புத்தன் முகத்தில் மீண்டும் புன்முறுவலைக் காண்பதெப்போ...?
வீழ்ந்த தமிழ் இனம் மீண்டும் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதெப்போ...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment