Saturday, January 26, 2013

யாம் விடும் கரியமில வாயுண்டு
எமக்கு உயிர் மூச்சைத்  தருவாள்
வெங்கதிரோன் தகிக்கையிலும்
தென்றல் தனை அனுப்பிடுவாள்
மலர் தருவாள் மணம் தருவாள்
காய் தருவாள் கனி தருவாள்
மழை பொழிய தம் குருதி ஈந்து
மண் செழித்து பயிர் வளர்ப்பாள்
உண்ண உணவளிப்பாள் மரத்தாய்
மானுடா மறந்தாய் நன்றிதனை
மரத்தாயைப் போற்றி  வளர்த்தால்
வாழ்வாய் நீ வையமுள்ளளவும்

--கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment