Thursday, February 28, 2013

தான் உண்ண மறந்து
எனைக் கண்ணாய் வளர்த்த
அன்னையே வாடி ஒடுங்கி
அழகெலாம் அன்பாய்
உருமாற்றி ஓடாய்ப் போனாலும்
காப்பகத்தில் விட்டு
கட்டழகோடு புது மொட்டாய்
கணவர்கள் பல கண்டு
தினவெடுத்து அலையும்
மேனாட்டுத் தாய் உன்னிலும்
மேலானள் ஆவாளோ...
வாழும் தெய்வமும் நீயன்றோ...!!

# கருங்குளம் மா.முருகன்
என் அலைபேசி
ஒலிக்கும் போதெல்லம்
நீதானோ என ஓடிச்
சென்று எடுக்க என்
கால்கள் பரபரக்கிறது

# கருங்குளம் மா.முருகன்
உன் விழியில்
மின்னிடும் உயிரின்
உணர்வுகள் யாவிலும்
என் ஜீவனின் துடிப்பைக்
காண்கிறேன் கிளியே

# கருங்குளம் மா.முருகன்
மருந்தும் நீயே சுவைமிகு
விருந்தும் நீயே எனை
அருந்தும் விழியும் நீயே
விழி வீசும் ஒளியும் நீயே
ஒளி வீசும் உயிரும் நீயே

# கருங்குளம் மா.முருகன்
உன் காலடி ஓசையில்
கலந்த என் இதயத்
துடிப்பொலி உன்னோடு
வலம் வருவதை அறிவாயா...?

# கருங்குளம் மா.முருகன்

சூரியன் கரம் தொட்டு
மட்டுமே மலரும்
தாமரை மொட்டு நான்
நீதானே என் இதய சூரியன்

# கருங்குளம் மா.முருகன்




திறமை உங்களை உச்சத்திற்கு இட்டுச் செல்லும். உங்கள் நன்னடத்தை மட்டுமே நீங்கள் கீழே விழுந்து விடாமல் உங்களை அங்கேயே நிலைபெறச் செய்யும்:- ஜான் வுடன்

# நற்பண்பும் ஆற்றலும் ஒன்று சேர்ந்தால் என்றும் வீழ்ச்சியென்பதே இல்லை:- கருங்குளம் மா.முருகன்
 உங்கள் திறமைக்கேற்ப உங்கள் இலட்சியங்களைக் குறுக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் இலட்சியங்களுக்கேற்ப உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

# எதை அடைய விரும்புகிறீர்களோ அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் அது தாமாகவே உங்களை வந்தடையும்


விழிப்புணர்வோடு கூடிய முயற்சியால் தமது வாழ்வை மேன்மையுறச் செய்யும் ஒரு மனிதனின் கேள்விக் கிடமில்லாத திறமையை விட உற்சாகமூட்டும் உண்மை வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை:- ஹென்றி டேவிட் தோரோ.

ஆன்மாவிற்குள்ளிருந்து சக்தியோடு பீறிட்டெழும் முயற்சி செயலுக்கு வேகத்தையும் ஆற்றலையும் அளித்து வெற்றிக் கனியை விரைவில் உங்கள் மடியில் விழச் செய்கிறது. தளர்வறியா முயற்சி இலக்கை அடையத் தவறுவதே இல்லை:- கருங்குளம் மா.முருகன்
“It's not the size of the dog in the fight, it's the size of the fight in the dog.”
― Mark Twain

போட்டியில் உங்கள் ஆற்றல் மட்டுமே கவனிக்கப்படும்; உங்கள் தோற்றமல்ல:- கருங்குளம் மா.முருகன்
மனிதர்கள் எப்போதும் தங்களது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்கிறாகள். தங்களது ஆற்றல்களை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை:- நெப்போலியன்

# உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஆற்றல்களை அறிந்து அவற்றை வெளிக் கொணர்ந்தீர்களானால் உங்கள் தேவைகள் மட்டுமல்ல உங்களைச் சேர்ந்தவர்கள் தேவைகளையும் கூட உங்களால் நிறைவேற்றமுடியும்:- கருங்குளம் மா.முருகன்
பட்டங்கள் காற்றை எதிர்த்து உயரப் பறக்கின்றன. அதனோடு பயணித்தல்ல:-வின்ஸ்டன் சர்ச்சில்

# தடைகளைத் தகர்த்து முன்னேறு. உன்னைத் தடுக்க இவ்வுலகில் உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை:- கருங்குளம் மா.முருகன்

துணிவு என்பது உடலின் தன்மையல்ல. அது ஆன்மாவின் இயல்பு:- மகாத்மா காந்தி

# துணிவை வேறு யாரும் உங்களுக்கு ஊட்டிவிட முடியாது. உங்களுக்குள் உறையும் அதனை தேடி உயிர்ப்பிக்க உங்களால் மட்டுமே முடியும்:- கருங்குளம் மா.முருகன்
தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் துணிவில்லாதவன் பிறரது மதிப்பைப் பெறமுடியாது.

# தன்மான முள்ளவர்கள் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை.
துணிச்சல் மிக்கவனே சுதந்திரமானவன்

# துணிச்சல் அடிமைத் தளைகளைத் தகர்த் தெறிகிறது

Wednesday, February 27, 2013


பொங்கும் பாலில்
தெளித்த நீர் போல
என் விடாத காதல்
அடைமழைப் பொழிவில்
உன் திமிறிப் பொங்கும் திமிரும்
அடங்கிப் போனது
காதல் செய்த மாயத்தில்
என் விரல சைவில்
இயங்கும் சர்க்கஸ் புலியானாய்
புலியைப் பூனையாக்க
பெருங் காதலாலன்றி
வேறு எஃதால் கூடும்.....?

# கருங்குளம் மா.முருகன்
பணமோ ஆடம்பர வாழ்வோ மட்டும் மகிழ்வையும் மன நிறைவையும் தந்துவிடாது. எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி உண்மையான சந்தோஷத்தோடு துள்ளித் திரியும் பேறு நேர்வழியில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே கிட்டுகிறது.

இந்து என்பது மதம் அல்ல. இந்துஸ்தானம் என சிந்து நதியின் பெயரால் அழைக்கப்படும் இத தேசத்தையும் அதன் பண்பாட்டையும் குறிக்கும். சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்யம், கௌமாரம் எனும் வழிபாட்டு முறைகளும் கூட அறம் அல்லது தர்மம் எனப்படும் வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் வேதங்களை ஆதாரமாகக் கொண்டவை. தர்மம் அல்லது அறம் வாழ்வியல் நெறியேயன்றி மதமாகாது. மதம் என்பது ஹீப்ரு மதங்களை மட்டுமே குறிக்கும் பதம். இந்துஸ்தானம், இந்து மஹா சமுத்திரம் என்பதெலாம் இந்த புண்ணிய பூமியையும் அது சார்ந்த பெருங்கடலையும் குறிக்கும். இந்த தேசத்தின் பெயராலேயே இதன் சநாதன-அழிவிலா தர்மமும் வெள்ளையனால் அழைக்கப்பட்டது. அது அவன் கண்டு பிடித்த பெயரல்ல.

हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।

ஹிமாலயம் சமாரப்ய யாவதிந்து சரோவரம் தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் பிரசக்ஷதே- பிரஹஷ்பத்ய சம்ஹிதா-ரிக் வேதம்

# இமயம் முதல் இந்துமாக்கடல் வரை பரந்து பட்ட இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இப்பெரு நிலம் இந்துஸ்தானம் என அழைக்கப்படுகிறது. உலகின் மிகத் தொன்மையான ரிக் வேதம் இவ்வாறு முழங்குகிறது.
நம்பிக்கையும் துணிவும் உடையோருக்கு "சாத்திய மில்லாத தெதுவும்" இருக்க சாத்தியமில்லை.
கரை காட்சியிலிருந்து மறைவதை ஏற்கும் துணிவில்லை யெனில் புதிய பெருங்கடல்களை மனிதன் கண்டு பிடிக்கமுடியாது.

# அருஞ்சாதனைகள் பல அளவிலா துணிச்சலினாலேயே சாத்தியமாகியுள்ளன.

Tuesday, February 26, 2013

உன் கருவிழி ஒளியில்
நிலவொளி மங்கித்தான் போகிறது.
என்ன இருந்தாலும் அது இரவல் ஒளிதானே....
உன் விழி சிந்தும் ஒளி ஆன்ம சுயப்பேரொளி அல்லவா..?
நிலவு:

நான் வளர்வது மில்லை
தேய்வது மில்லை.
இரவல் ஒளியென்றாலும்
முழுமையாக வீசிக்
கொண்டுதா னிருக்கிறேன்
வளர்வதும் தேய்வதும்
உங்கள் காட்சிப் பிழை
முழுமையான என்னையே
முழுமையாகக் காட்டாத
உங்கள் கண்களை மட்டுமே
நம்பும் நீங்கள் என்னையும்
உங்களையும் இயக்கும்
சுயஓளிப் பேரறிவாம்
இறையை உணர்வது எங்ஙனம்....?
கனவுகள் இன்றி எதையும் நாம் அடைவதில்லை; அன்பு இன்றி எதையும் நாம் உணர்வதில்லை; இறையின்றி நாமே இல்லை.

# நம்முள் கனவாகவும் காதலாகவும் உணர்வாகவும் உயிராகவும் உறைவது இறையே.
காதல்
ஒருமுறை
தான்
வரும்
என்கிறார்கள்
உனைக்
காணும்
ஒவ்வொரு
முறையும்
என்னுள்
காதல்
சுரக்கிறது
உன்
விழியினில்
சுடர்விடும்
ஆன்ம
ஒளி
என்னில்
விழும்
ஒவ்வொரு
கணமும்
என்
காதல் செடி
பூ பூக்கிறது
I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.”
― Marilyn Monroe

# நான் சுய நலக்காரி; பொறுமையில்லாதவள்; சற்று உறுதிப்பாடில்லாதவள். நான் தவறிழைக்கிறேன்; கட்டுப்பாடிழந்து சமயங்களில் கையாள முடியாதவளாகிறேன். எனது கீழ்மை நிலையில் உங்களால் என்னைக் கையாள இயல வில்லை யெனில் நிச்சயமாக எனது உன்னத நிலையிலும் எனக்கு ஏற்றவராக மாட்டீர்கள்:- மர்லின் மன்ரோ

@ இருமைகள் நிறைந்தது உலகம். நன்மையும் தீமையும் கலந்தே மனிதர்கள் காணப்படுகிறார்கள். நன்மை தீமை கலப்பு விகிதம் வேண்டுமானால் மாறுபடலாம். உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே உண்மையான நீடித்த அன்பு நிலவ முடியும்:- கருங்குளம் மா.முருகன்
மனதிற்குப் 
பிடித்து 
விட்டால் 
மரவட்டை 
கூட 
அழகுதான்
விழியைக் கேட்டு
இமைகள் இமைப்பதில்லை
உன்னைக் கேட்டு உன்
இதயமும் துடிப்பதில்லை
நம் காதலும் தான்;
பள்ளத்தை நோக்கிப்
பாய்ந்தோடும் வெள்ளம் போல
பரஸ்பரம் உள்ளத்தை நோக்கி
பாயும் காதல் வெள்ளத்தில்
நான் எனது என்பதெல்லாம்
அடித்துச் செல்ல நாம்
மட்டுமே மிச்சமானோம் நாமாகவே

Monday, February 25, 2013


கண்ணனைக் காணவே கண்களால் கூடுமோ
அகத்திலே ஒளிர்ந்திடும் மெய்யறி வின்பமே
இகத்திலே இசையுடன் உருகியே களித்திட
சகமெலாம் பொடிப் பொடியாகி மறைந்திட
அகமழிய கசிந்துருகி காதலொடு கலந்திட்டேன்
பரகதியும் அருளாயோ பரந்தாமா தாள்சரணம்

# கருங்குளம் மா.முருகன்

படம்- நன்றி: Keshav Venkataraghavan
துரோகமும் ஏமாற்றமுமே உங்களை வலிமை யுள்ளவ ராக்குகிறது. உங்கள் மீது அளவு கடந்த காதல் கொண்டிருப்பதால் தான் உங்களை பலவீனனாகவே வைக்காமல் துரோகம், ஏமாற்றம் இவைகளை சந்திக்கச் செய்து பலவானாக்குகிறான் இறைவன்.
மூளை-அறிவு; இதயம்-அன்பு; இவற்றில் இதயமுள்ளவகளே அனைவராலும் விரும்பப் படுகிறார்கள்.

Sunday, February 24, 2013

பிறவிப் பெருங்கடலில் வாழ்வெனும் மத்து கொண்டு
கடைந்தெடுத்த அநுபவங்கள் நச்சோ அமிழ்தோ யாமறியோம்
அடைந்திட்ட அனைத்துமாய் ஆனவனும் நீயன்றோ அருட்கடலே
அடைக்கலமென சரண்புகுந்தோம் ஆட்கொண்டால் ஆகாதோ

# கருங்குளம் மா.முருகன்

படம்....நன்றி: Keshav Venkataraghavan
உன் கண்களில் துளிர்க்கும் நீர்
உன் உயிரில் கலந்த என்
தீராக் காதல் சுனையின்
பெருக்கில் கசிந்த திவலையோ

#கருங்குளம் மா.முருகன்

Saturday, February 23, 2013

நான் நீயாகவும்
நீ நானாகவும்
ஒருமையில்
ஒன்றானதே
வீடு பேறோ..?

#கருங்குளம் மா.முருகன்
உறைந்திருந்த நான்
உருகினேன் நின்
காதல் தகிப்பில்

#கருங்குளம் மா.முருகன்
மலர்ந்த
பின்னும்
பூஜைக்கு
பறிக்க்கப்
படாமல்
செடியிலேயே
வாடிக்
கருகும்
மலர்கள்....

-முதிர் கன்னிகள்
பிரச்சினைக்கு வெளியே இருக்கும் வரை நம்மோடு பயணிக்கும் துணிவு பிரச்சினைக்கு உள்ளே மாட்டிக் கொண்டதும் காணாமல் போய்விடுகிறது. மனச் சம நிலை யுடையவர்கள் மட்டுமே விரைந்து மீண்டு வருகிறார்கள்.

குழந்தை வரம் வேண்டி
கோவில் கோவிலாக
ஏறி இறங்கும் தம்பதியர்
இருக்கும் உலகில்தான்
குழந்தையை வளர்க்க
வழியின்றி குப்பைத்
தொட்டியில் வீசி
யெறிவோரும் வாழ்கின்றனர்
உயிரில்
உணர்வில்
நினைவில்
யாவுமாய்
கலந்திட்ட
உன்னை
பிரிவது
எங்ஙனம்..?
கட்புலனில்
பிரிந்தாலும்
நுண்ணுணர்வில்
உறையும் நீ
பிரிந்தால்
உடலும்
வீழாதோ
மண்ணில்
மடிந்து...!!

# கருங்குளம் மா.முருகன்

கற்பனைக் கெட்டாது
எங்கும் நிறைந்த தம்மை
அடியார் வரித்து வழிபடும்
எழிற் சிலையை கடத்தி
விற்கச் செய்து வாழ
வகை யறியா திருடனையும்
காத்தருளும் கருணைக் கடல்
உலகெலாம் காத்த ருளும்
உணர்தற் கரிய மெய்ப் பொருள்
அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
வானில் என்றும் அதன் உலா
அன்று கண்டு ரசித்தவ னெலாம்
தென்றல் தழுவும் தேன் நிலா
இன்று மண்ணில் மறைந்த தேன் நிலா
வாழ்க்கை ஒரு விளையாட்டு.
நீங்கள் செய்யவேண்டிய தெல்ல்லாம்
அதை எப்படி விளையாடுவ தென
தெரிந்து கொள்வதில்தான் உள்ளது.

# வாழ்க்கை யெனும் விளையாட்டில்
வெற்றி தோல்விகள் இயல்பு.
இன்று வெல்பவன் நாளை தோற்கிறான்;
நேற்று தோற்றவன் இன்று வெல்கிறான்.

Friday, February 22, 2013

வெண்ணையாம் ஜீவர்களிடம் பெருங்காத லுடையோனே
மண்ணையும் விண்ணையும் திருவாயில் கொண்டோனே
புண்ணிய பாவவினைத் தீயணைத்து எஞ்ஞான்றும்
கண்ணிலும் கருத்திலும் உருக்கொண்டு விளங்கி
எண்ணிய யாவுமாய் எங்கனும் பரவித்
திண்ணிய தண்ணிழல் திருவடி சேர்ப்பாயோ
நேர்மையுடையவன் தன்னிடமில்லாததை இருப்பதாகக் கூறி வீண் பெருமைக்காக பாசாங்கு செய்யமாட்டான். துணிச்சலுடன் தான் சரியென நம்பும் விஷயத்திற்காக உலகமே எதிர்த்தாலும் தனியொருவனாய் போராடுவான். நம்ப்பிக்கை மிகுந்தவன் எதிரிகள் உட்பட அனைவரையும் மதித்து நடப்பான். மனித உறவுகளின் மாண்பைப் பேணும் அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து வெளிப்படுகின்றன.- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
# உண்மை, நேர்மை, நம்பிக்கை இவை மூன்றும் அளப்பரிய விஷயங்களை சாதிக்கத் தூண்டும்.

Thursday, February 21, 2013

மனித குல முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாவன:
1. நல்லவை எவை அல்லவை எவை எனப் பிரித்துணரும் பகுத்தறிவு
2. மனித மாண்புகளை வளர்க்கும் கல்வி
3. சிந்தனைத் தெளிவு
4. எதிர்பார்ப்பில்லாத தூய அன்புடைமை
5. புடம்போட்ட பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற மாசிலா நன்னடத்தை
6. அறநெறி வழுவா குடும்பம்
7. முறை வழுவா செங்கோலாட்சி
காயம் பட்ட மனம்
சாயத் துடிக்கும் கணம்
காயம் தொட்டு கனிவாக
மாயம் செய்தாய் தினம்
கபடமற்ற 
சிரிப்பைக் 
காணும் 
போதெல்லாம் 
இறைவன் 
நம்மோடு 
இருக்கிறான்
 என்பதை
உணர முடிகிறது.

Wednesday, February 20, 2013

நாம் வாழும்போது நறுமணம் பரப்பி வாழ்கிறோம். வீழ்ந்த பின் வாடிப் போனாலும் துர்நாற்றம் வீசுவதில்லை. ஆனால் இம்மானிடர்கள் புண்ணுக்குப் பொன் தகடு வேய்ந்தது போல வாழும்போது செயற்கையாக மணமூட்டிக் கொள்கிறார்கள். வீழ்ந்த பின் வழியெங்கும் வீசும் துர் நாற்ற அலைகளை மறைக்க நம்மை வீசியெறிந்து செல்கிறார்கள். வாழும் போதும் வாழும் காலத்திற்குப் பின்னும் வையம் வாழ்த்த அன்பையும் ஈகையையும் வாரியிறைத்தவர்கள் மிகச் சொற்பமே என இறுதி ஊர்வல வீதிகளில் இறைந்து கிடக்கும் பூக்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன.
அன்பு 
அழிக்கும் 
சக்திதான் 
.பகைமையை 
அழிக்கிறது; 
கோபத்தை 
அழிக்கிறது; 
அகந்தையை 
அழிக்கிறது; 
வெறுப்பை 
அழிக்கிறது; 
அன்பு 
அழிக்கும் 
சக்திதான்.
காதல் 
உங்களிட
மிருந்து 
வெளியேறும்
போது
மடிந்து 

போவது 
நீங்கள் 
தானே
அன்றி
காதல் அல்ல.
தலை போகிற
வேலையிலும்
என் மடி சாயும்
உன் தலை கோதி
ஈர இதழ் கவ்வி
முத்தக் கடலில்
மூழ்கும் தருணம்
பணி தரும்
மன அழுத்தமும்
பதட்டமும்
என்னைவிட
எது தான்
முக்கியம்
எனும் நின்
காதல் கதகதப்பில்
உருகும் பனியென
காணாமல்
போய் விடுகிறது.
வானம்
பார்த்த
பூமியாக
வறண்ட
என்
இதயத்திலும்
நினதன்பு
மழை
துளிர்க்கச்
செய்கிறது
காதல்
விருக்ஷத்திற்கான
முதல்
தளிரை
வழக்குரைஞர்
வாதத் திறத்திலும்
பொய் சாட்சியங்களாலும்
நிரபராதியாக்கப் பட்ட
கொலைகாரனைக்
கண்டு கபடமின்றி
அன்னை தோள்
சாய்ந்து சிரிக்கும்
கொலை யுண்டவரின்
பிஞ்சுக் குழந்தையின்
வடிவில் இறைவன்
சிரிக்கிறான்..
வினை வலியது
மகனே
அது தரும்
வேதனைத் தீயில்
நீ வெந்து போவாயென
பாவங்கள்
இப்பிறப்பில்
செயும்
நற்செயல்களால்
கிட்டும்
புண்ணியத்தால்
மட்டுமே
கழுவப்படும்

Sunday, February 17, 2013


நாளும் பொழுதும் நமசிவாயமென நினைந்துருக
சூழும் மும்மலமும் வீழ விளங்கும் சுடரோனே
ஆளும் அறிவே அழிவிலா அறமே அருளாலா
கோளும் குறைத்திடுமோ பேரன்பே நினதருளை
மூளும் பகையெலாம் வீழவே நாளும் வாராயோ
மூச்சுக்
காற்றில்
கலந்திட்ட
நின்
நினைவுகள்
உயிர்த்
துடிப்போடு
என்னுள்
பசுமையாய்...!


  
உன் விழி
மோதி சிதறுண்ட
என் இதயத்தை
பொறுக்கிக் கொண்டு
எங்கே ஓடுகிறாய்?
எச்சில் தொட்டு
ஒட்டி ஒன்றாக்கி
உனதாக்கி விளையாடவோ...?
இதய மற்றவன் என
ஊர் தூற்றாதோ?
உன் மூச்சுக் காற்றில்
உயிர் பெற்று மீண்டும்
துடித்திடும் என்
இதயத்தைத் திருப்பிக்
கொடுத்துவிடு அன்றேல்
உன் இதயம் தந்தெனை
உயிர் பெற்றெழச் செய்....!!
                                    

Friday, February 15, 2013

முதிராக் காதல் சொல்கிறது, "எனக்கு நீ வேண்டும் அதனால் உன்னை நான் காதலிக்கிறேன்". முதிர்காதல் சொல்கிறது, உன்னை நான் காதலிக்கிறேன்; அதனால் நீ வேண்டும்.

# காதல் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கடந்தது. காதலுக்காக மட்டுமே காதல் தோன்றுகிறது. காதலே கடவுள்; கடவுளே காதல்
எல்லோருமே தவறிழைக்கிறோம். உங்களால் பிறரது தவறுகளை மன்னிக்க முடியவில்லையெனில் பிறர் உங்களது தவறுகளை மன்னிக்க வேண்டும் என் நீங்கள் எதிர்பார்ப்பதும் நியாயமில்லை தானே...?

# அளவிலா அன்புடையோர் இயல்பிலேயே மன்னிக்கும் இயல்பை பெறுகிறார்கள். மன்னிக்கும் போது மட்டுமே அளவிலா அன்புடைய இறை நிலையை உணர முயற்சிக்கிறீர்கள். மன்னிப்போம்; மனிதருள் தெய்வமாவோம்
                      

 Photo: எல்லோருமே தவறிழைக்கிறோம். உங்களால் பிறரது தவறுகளை மன்னிக்க முடியவில்லையெனில் பிறர் உங்களது தவறுகளை மன்னிக்க வேண்டும் என் நீங்கள் எதிர்பார்ப்பதும் நியாயமில்லை தானே...?

# அளவிலா அன்புடையோர் இயல்பிலேயே மன்னிக்கும் இயல்பை பெறுகிறார்கள். மன்னிக்கும் போது மட்டுமே அளவிலா அன்புடைய இறை நிலையை உணர முயற்சிக்கிறீர்கள். மன்னிப்போம்; மனிதருள் தெய்வமாவோம்

நீ என்னை காதலிப்பது நிஜமென்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என
உலகுக்கே கேட்கும் வண்ணம் உரக்கக் கத்து என்றாள். அவள் காதுகளில் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு நான் உன்னைக் காதலிக்கிறேன் எனக் கிசுகிசுத்தேன். முறைத்துப் பொய் கோபம் காட்டினாள். நீதானே என் உலகம் என்றேன். தூக்கித் தட்டாமாலை சுற்றினாள். எங்கிருந்து வந்ததடி இவ்வளவு பலம் என்றேன் உன் காதல் தந்தது என்கிறாள்.


உங்கள் தன்முனைப்பு (கர்த்ருத்வம்-Ego) முற்றிலும் ஆவியாகி உங்கள் மனம் காலியாகும்போது அங்கே உண்மை அன்பு-காதல் நிறைந்து மணம் வீசுகிறது.



கண் முன்னே விடைகள் தென்படினும் எப்போதும்
கண்மூடிக் காணாது அவையெலாம் தொலைத்தபின்
கேள்விகளையே தொங்கித்  துரத்திப் பயணிக்கும்
புதிராகவே தொடர்வதாம்  நெடும் பயண வாழ்க்கை