Thursday, February 28, 2013
விழிப்புணர்வோடு
கூடிய முயற்சியால் தமது வாழ்வை மேன்மையுறச் செய்யும் ஒரு மனிதனின்
கேள்விக் கிடமில்லாத திறமையை விட உற்சாகமூட்டும் உண்மை வேறெதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை:- ஹென்றி டேவிட் தோரோ.
ஆன்மாவிற்குள்ளிருந்து சக்தியோடு பீறிட்டெழும் முயற்சி செயலுக்கு வேகத்தையும் ஆற்றலையும் அளித்து வெற்றிக் கனியை விரைவில் உங்கள் மடியில் விழச் செய்கிறது. தளர்வறியா முயற்சி இலக்கை அடையத் தவறுவதே இல்லை:- கருங்குளம் மா.முருகன்
ஆன்மாவிற்குள்ளிருந்து சக்தியோடு பீறிட்டெழும் முயற்சி செயலுக்கு வேகத்தையும் ஆற்றலையும் அளித்து வெற்றிக் கனியை விரைவில் உங்கள் மடியில் விழச் செய்கிறது. தளர்வறியா முயற்சி இலக்கை அடையத் தவறுவதே இல்லை:- கருங்குளம் மா.முருகன்
மனிதர்கள்
எப்போதும் தங்களது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்கிறாகள். தங்களது
ஆற்றல்களை ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை:- நெப்போலியன்
# உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஆற்றல்களை அறிந்து அவற்றை வெளிக் கொணர்ந்தீர்களானால் உங்கள் தேவைகள் மட்டுமல்ல உங்களைச் சேர்ந்தவர்கள் தேவைகளையும் கூட உங்களால் நிறைவேற்றமுடியும்:- கருங்குளம் மா.முருகன்
# உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஆற்றல்களை அறிந்து அவற்றை வெளிக் கொணர்ந்தீர்களானால் உங்கள் தேவைகள் மட்டுமல்ல உங்களைச் சேர்ந்தவர்கள் தேவைகளையும் கூட உங்களால் நிறைவேற்றமுடியும்:- கருங்குளம் மா.முருகன்
இந்து என்பது மதம் அல்ல. இந்துஸ்தானம் என சிந்து நதியின் பெயரால் அழைக்கப்படும் இத தேசத்தையும் அதன் பண்பாட்டையும் குறிக்கும். சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்யம், கௌமாரம் எனும் வழிபாட்டு முறைகளும் கூட அறம் அல்லது தர்மம் எனப்படும் வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் வேதங்களை ஆதாரமாகக் கொண்டவை. தர்மம் அல்லது அறம் வாழ்வியல் நெறியேயன்றி மதமாகாது. மதம் என்பது ஹீப்ரு மதங்களை மட்டுமே குறிக்கும் பதம். இந்துஸ்தானம், இந்து மஹா சமுத்திரம் என்பதெலாம் இந்த புண்ணிய பூமியையும் அது சார்ந்த பெருங்கடலையும் குறிக்கும். இந்த தேசத்தின் பெயராலேயே இதன் சநாதன-அழிவிலா தர்மமும் வெள்ளையனால் அழைக்கப்பட்டது. அது அவன் கண்டு பிடித்த பெயரல்ல.
हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
ஹிமாலயம் சமாரப்ய யாவதிந்து சரோவரம் தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் பிரசக்ஷதே- பிரஹஷ்பத்ய சம்ஹிதா-ரிக் வேதம்
# இமயம் முதல் இந்துமாக்கடல் வரை பரந்து பட்ட இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இப்பெரு நிலம் இந்துஸ்தானம் என அழைக்கப்படுகிறது. உலகின் மிகத் தொன்மையான ரிக் வேதம் இவ்வாறு முழங்குகிறது.
I'm selfish, impatient and a little insecure. I
make mistakes, I am out of control and at times hard to handle. But if
you can't handle me at my worst, then you sure as hell don't deserve me
at my best.”
― Marilyn Monroe
# நான் சுய நலக்காரி; பொறுமையில்லாதவள்; சற்று உறுதிப்பாடில்லாதவள். நான் தவறிழைக்கிறேன்; கட்டுப்பாடிழந்து சமயங்களில் கையாள முடியாதவளாகிறேன். எனது கீழ்மை நிலையில் உங்களால் என்னைக் கையாள இயல வில்லை யெனில் நிச்சயமாக எனது உன்னத நிலையிலும் எனக்கு ஏற்றவராக மாட்டீர்கள்:- மர்லின் மன்ரோ
@ இருமைகள் நிறைந்தது உலகம். நன்மையும் தீமையும் கலந்தே மனிதர்கள் காணப்படுகிறார்கள். நன்மை தீமை கலப்பு விகிதம் வேண்டுமானால் மாறுபடலாம். உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே உண்மையான நீடித்த அன்பு நிலவ முடியும்:- கருங்குளம் மா.முருகன்
― Marilyn Monroe
# நான் சுய நலக்காரி; பொறுமையில்லாதவள்; சற்று உறுதிப்பாடில்லாதவள். நான் தவறிழைக்கிறேன்; கட்டுப்பாடிழந்து சமயங்களில் கையாள முடியாதவளாகிறேன். எனது கீழ்மை நிலையில் உங்களால் என்னைக் கையாள இயல வில்லை யெனில் நிச்சயமாக எனது உன்னத நிலையிலும் எனக்கு ஏற்றவராக மாட்டீர்கள்:- மர்லின் மன்ரோ
@ இருமைகள் நிறைந்தது உலகம். நன்மையும் தீமையும் கலந்தே மனிதர்கள் காணப்படுகிறார்கள். நன்மை தீமை கலப்பு விகிதம் வேண்டுமானால் மாறுபடலாம். உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே உண்மையான நீடித்த அன்பு நிலவ முடியும்:- கருங்குளம் மா.முருகன்
Saturday, February 23, 2013
நேர்மையுடையவன் தன்னிடமில்லாததை இருப்பதாகக்
கூறி வீண் பெருமைக்காக பாசாங்கு செய்யமாட்டான். துணிச்சலுடன் தான் சரியென
நம்பும் விஷயத்திற்காக உலகமே எதிர்த்தாலும் தனியொருவனாய் போராடுவான்.
நம்ப்பிக்கை மிகுந்தவன் எதிரிகள் உட்பட அனைவரையும் மதித்து நடப்பான். மனித
உறவுகளின் மாண்பைப் பேணும் அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து
வெளிப்படுகின்றன.- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
# உண்மை, நேர்மை, நம்பிக்கை இவை மூன்றும் அளப்பரிய விஷயங்களை சாதிக்கத் தூண்டும்.
# உண்மை, நேர்மை, நம்பிக்கை இவை மூன்றும் அளப்பரிய விஷயங்களை சாதிக்கத் தூண்டும்.
Thursday, February 21, 2013
மனித குல முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாவன:
1. நல்லவை எவை அல்லவை எவை எனப் பிரித்துணரும் பகுத்தறிவு
2. மனித மாண்புகளை வளர்க்கும் கல்வி
3. சிந்தனைத் தெளிவு
4. எதிர்பார்ப்பில்லாத தூய அன்புடைமை
5. புடம்போட்ட பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற மாசிலா நன்னடத்தை
6. அறநெறி வழுவா குடும்பம்
7. முறை வழுவா செங்கோலாட்சி
1. நல்லவை எவை அல்லவை எவை எனப் பிரித்துணரும் பகுத்தறிவு
2. மனித மாண்புகளை வளர்க்கும் கல்வி
3. சிந்தனைத் தெளிவு
4. எதிர்பார்ப்பில்லாத தூய அன்புடைமை
5. புடம்போட்ட பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற மாசிலா நன்னடத்தை
6. அறநெறி வழுவா குடும்பம்
7. முறை வழுவா செங்கோலாட்சி
Wednesday, February 20, 2013
நாம் வாழும்போது நறுமணம் பரப்பி வாழ்கிறோம்.
வீழ்ந்த பின் வாடிப் போனாலும் துர்நாற்றம் வீசுவதில்லை. ஆனால்
இம்மானிடர்கள் புண்ணுக்குப் பொன் தகடு வேய்ந்தது போல வாழும்போது செயற்கையாக
மணமூட்டிக் கொள்கிறார்கள். வீழ்ந்த பின் வழியெங்கும் வீசும் துர் நாற்ற
அலைகளை மறைக்க நம்மை வீசியெறிந்து செல்கிறார்கள். வாழும் போதும் வாழும்
காலத்திற்குப் பின்னும் வையம் வாழ்த்த அன்பையும் ஈகையையும்
வாரியிறைத்தவர்கள் மிகச் சொற்பமே என இறுதி ஊர்வல வீதிகளில் இறைந்து
கிடக்கும் பூக்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன.
உன் விழி
மோதி சிதறுண்ட
என் இதயத்தை
பொறுக்கிக் கொண்டு
எங்கே ஓடுகிறாய்?
எச்சில் தொட்டு
ஒட்டி ஒன்றாக்கி
உனதாக்கி விளையாடவோ...?
இதய மற்றவன் என
ஊர் தூற்றாதோ?
உன் மூச்சுக் காற்றில்
உயிர் பெற்று மீண்டும்
துடித்திடும் என்
இதயத்தைத் திருப்பிக்
கொடுத்துவிடு அன்றேல்
உன் இதயம் தந்தெனை
உயிர் பெற்றெழச் செய்....!!
எல்லோருமே தவறிழைக்கிறோம். உங்களால் பிறரது
தவறுகளை மன்னிக்க முடியவில்லையெனில் பிறர் உங்களது தவறுகளை மன்னிக்க
வேண்டும் என் நீங்கள் எதிர்பார்ப்பதும் நியாயமில்லை தானே...?
# அளவிலா அன்புடையோர் இயல்பிலேயே மன்னிக்கும் இயல்பை பெறுகிறார்கள். மன்னிக்கும் போது மட்டுமே அளவிலா அன்புடைய இறை நிலையை உணர முயற்சிக்கிறீர்கள். மன்னிப்போம்; மனிதருள் தெய்வமாவோம்

# அளவிலா அன்புடையோர் இயல்பிலேயே மன்னிக்கும் இயல்பை பெறுகிறார்கள். மன்னிக்கும் போது மட்டுமே அளவிலா அன்புடைய இறை நிலையை உணர முயற்சிக்கிறீர்கள். மன்னிப்போம்; மனிதருள் தெய்வமாவோம்

நீ என்னை காதலிப்பது நிஜமென்றால் நான் உன்னை காதலிக்கிறேன் என
உலகுக்கே கேட்கும் வண்ணம் உரக்கக் கத்து என்றாள். அவள் காதுகளில் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு நான் உன்னைக் காதலிக்கிறேன் எனக் கிசுகிசுத்தேன். முறைத்துப் பொய் கோபம் காட்டினாள். நீதானே என் உலகம் என்றேன். தூக்கித் தட்டாமாலை சுற்றினாள். எங்கிருந்து வந்ததடி இவ்வளவு பலம் என்றேன் உன் காதல் தந்தது என்கிறாள்.
உலகுக்கே கேட்கும் வண்ணம் உரக்கக் கத்து என்றாள். அவள் காதுகளில் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு நான் உன்னைக் காதலிக்கிறேன் எனக் கிசுகிசுத்தேன். முறைத்துப் பொய் கோபம் காட்டினாள். நீதானே என் உலகம் என்றேன். தூக்கித் தட்டாமாலை சுற்றினாள். எங்கிருந்து வந்ததடி இவ்வளவு பலம் என்றேன் உன் காதல் தந்தது என்கிறாள்.