Sunday, March 31, 2013

கரை சேர்க்கும் நாவாய்




காதல் கடலில் தத்தளித்த என்னை
கரை சேர்க்க வந்த நாவாயோ நீ...!!

# கருங்குளம் மா.முருகன்

வெட்கத்தில் சிவந்த அந்தி




அந்தியும் மயங்கினளோ
சந்திரன் அழகினிலே
நாணத்தில் சிவந்து அவனுள்
காணாமல் கலந்தே மறைந்தனளோ...?

# கருங்குளம் மா.முருகன்

நிலாக் கன்னி




வான் கடல் தனிலே நட்சத்திர மீன்கள் நீந்த
வெண்ணிலா கன்னியவள் மிதந்து வந்து
என்னையே குறுநகையுடன் நோக்க
வெட்கம் தின்றுவிட வெறுமையாய் ஆனேன் நான்....!!

# கருங்குளம் மா.முருகன்

துயில் கொள்ளும் நினைவுகள்




என் மனத் தடாகத்தில்
நின் பார்வை யெனும்
கல்லெறிந்து எழுந்திட்ட
சலனத்தில் அடியாழத்தில்
நினைவுகளாய் துயில்கிறாய்
எப்பொழுதும் என்னுள்ளே...!!

# கருங்குளம் மா.முருகன்

காதலும் வெட்கமும் நிரம்பிய கன்னக் குழி

Photo: கன்னத்துக் குழியில் தேங்கி நிற்கும் வெட்கத்தில்
கண்கள் சிந்தும் காதலும் சேர்ந்தே கலந்ததுவோ...?

# கருங்குளம் மா.முருகன்






       
கன்னத்துக் குழியில் தேங்கி நிற்கும் வெட்கத்தில்
கண்கள் சிந்தும் காதலும் சேர்ந்தே கலந்ததுவோ...?

# கருங்குளம் மா.முருகன்

















வளைந்தாடும் தாமரை

Photo: பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து 
வளைந்தோடும் நதி போல என்
உள்ளத்தில் வழிந்தோடும் காதல் 
சுடரொளியை பகலவனாய்க் கண்டு 
வளைந்தாடும் தாமரைக் கொடியோ நீ....!!

# கருங்குளம் மா.முருகன்



பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து
வளைந்தோடும் நதி போல என்
உள்ளத்தில் வழிந்தோடும் காதல்
சுடரொளியை பகலவனாய்க் கண்டு
வளைந்தாடும் தாமரைக் கொடியோ நீ....!!

# கருங்குளம் மா.முருகன்

திறமையும் தகுதியும் அடைய முயற்சி செய்...






இடைவிடாத முயற்சியிலும் பயிற்சியிலும் கிட்டுவதே திறமை. திறமை நம்மோடு உடன்பிறந்த ஒன்றல்ல... # கருங்குளம் மா.முருகன்

தென்றலாய் வாராய்...




வலையில் சிக்குண்ட மீன்
உயிர் காற்றுக்கு ஏங்குதல் போல்
உலையில் கொதிக்கும் அரிசியாய்
உனைக் காணத் துடிக்கிறேன்
வருவாயா கண்களும் உயிர்கொத்த
தருவாயா தென்றலாய் தரிசனம்....!!

# கருங்குளம் மா.முருகன்

இடித்துரைக்கும் நட்பு




நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என ஒவ்வொருவரும் கேட்கிறார்கள். நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதில் நண்பர்கள் கவனம் செலுத்துகிறார்கள். சிறந்த நண்பர்கள் நீங்கள் என்ன சொல்லக் கூடாது என்பதில் கவனம் கொள்கிறார்கள்.

# நண்பனின் உயர்வே தனது உயர்வாய்க் காணபவன் உண்மை நண்பன். புகழ்ந்துரைக்கும் நட்பு எதிர்பார்ப்புடையது. இடித்துரைக்கும் நட்பு எதிர்பார்ப்பில்லாதது

இதயங்களின் உறவே நட்பு...






நட்பின் மொழி சொற்களில் அல்ல. பொருளில் உள்ளது. ஹென்றி டேவிட் தோரோ.

# இதயங்களின் இணக்கத்தில் தோன்றுவதே நட்பு; இதழகளின் பேச்சில் இழையோடுவதல்ல. # கருங்குளம் மா.முருகன்

Friday, March 29, 2013

நாணமுறும் மூக்குத்தி




நெல்லுக்குப் பாயும் நீர்
புல்லுக்கும் புசிதல் போல
இதழில் இதழ் மீட்டிட எழும்
இசையருவித் துளிகள்
என் மூக்குத்தியில் பட்டுத்
தெறித்திட இன்ப போதையில்
நாணும் அதன் அழகையும்
கொஞ்சம் இரசியேண்டா.....!!

# கருங்குளம் மா.முருகன்

வாடாத வசந்தம்





வெறுப்பு வெந்நீரை நீ என் 
வேர்களில் ஊற்றினாலும்
என்னுள் பாயும் பசுமைக் காதல் உதிரம்
என்னைப் பட்டுப் போகச் செய்யாதடி...!!
இலையுதிர் காலம் என்றும் என்னில் இல்லை
வசந்தத்தின் வளமையில் என்றும் உனை
குளிர்விப்பேன் உயிருக்குள் பூ தூவி....!!

#கருங்குளம் மா.முருகன்

கலைந்த தவம்





சிற்பியின் பிழையா...
கல்லின் குற்றமா...?
கடவுளாகும் தவத்தில்
சிதறிப் போனது
யார் செய்த தவப் பிழை...?

# கருங்குளம் மா.முருகன்

உயிர்களின் சங்கமம்





விழிகளின் சங்கமத்தில்
சேரத் துடிக்கும் உயிர்கள்
இதழ்களின் வழியே
இடம் மாறியதுவோ....?

# கருங்குளம் மா.முருகன்

முத்த ஒத்தடம்





நின் விழிகள் தாக்கி
வலி கண்ட என் தேகத்தில்
முத்த ஒத்தடம் கொடுத்து
நிவாரணம் செய்கிறாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

ஆதியந்தமிலா ஆனந்தப் பெருவெளி....




எண்ணச் சிதறல்களை எனக்குள் குவித்து
ஆழ்ந்து மூழ்கி எனை இழக்கும்
வேளையில் மௌனமே என் மொழியானது.
பொருள் புரியா சொற்களுக்கு
சொற்களை கடந்த மோன மொழி தனிலே
புதிய பொருள் புரியக் கண்டேன்
நான் எனது நீ உனது எலாம் கடந்த
ஆதி பரவெளியில் மெய் நிலை சுயதரிசனத்தில்
பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாய் காலம் மரணமுற
களிநடம் புரியக் கண்டதெலாம் வெறுங்கனவாயாகுமோ
நனவையும் கடந்த சொல்லிலடங்கா உயர் நனவேயன்றோ....!!

# கருங்குளம் மா.முருகன்











தகிக்கும் காதல்....

 

நின் நினைவெனும் நெய்யில்
கொழுந்து விட்டு எரிகிறது
என் சுடர்விடும் உயிர்த் தீ....!!

# கருங்குளம் மா.முருகன்
































காதலெனும் கடலினிலே....




ஊரே உறங்கும் போதும்
உன் காதல் அலைகள்
என்னுள் பேரிரைச்சலாய்...!!

# கருங்குளம் மா.முருகன்


நீ...பொர்ணமி...





ஏற்றமும் இறக்கமும்
மாற்றமும் மலர்ந்திடினும்
என்றும் என் வானில்
சுடர்விடும் முழுமதி நீ..!!

# கருங்குளம் மா.முருகன்

Thursday, March 28, 2013

தமிழ் விருந்து...என்னோடு நீ என்றென்றும்...




நீ இல்லாத பொழுதுகளில்
நின் நினைவுகளோடு வாழ்வதால்
நீ இல்லாத பொழுது என்பதே
என்றும் இல்லாத தாகிவிடுகிறது....!!

# கருங்குளம் மா.முருகன்

தமிழ் விருந்து....காதல் நோயில் வாடும் நிலா...




தன் காதல் இளம் சூரியனைக்
காணாத ஏக்கத்தில் நிலவுக் காதலி
பசலையில் தேய்ந்து இளைத்தனளோ..?

# கருங்குளம் மா.முருகன்

தமிழ் விருந்து...கூடிக் களிக்கும் நிலா...





வான்மகனிடம் நிலாப்பெண்
தன் ஒளிவெள்ளம்
பரப்பிக் கலந்து களிக்க
வெட்கத்தில் ஓடி
ஒளிந்து கொண்டதோ இருட்டு...!!

# கருங்குளம் மா.முருகன்

தமிழ் விருந்து...உயர்வுக்கு வழி...





மகிழ்ச்சியையும் வெற்றியையும் உங்கள் இலக்காகக் கொள்ளாதீர்கள்; அவற்றை உங்கள் இயல்பாக்கிவிடுங்கள்.

தமிழ் விருந்து...காலம் காலடியில்...




கடந்த கால வருத்தங்களையும் எதிர்கால கனவுகளையும் சுமந்து திரிவதை விடுத்து நிகழ்காலத்தில் சிறப்பாக செயலாற்றுபவர்கள் முக்காலத்தையும் தன் வயப் படுத்துகிறார்கள்.

தமிழ் விருந்து.....நதி போல ஓடிக்கொண்டிரு....





வெற்றி செயலோடு தொடர்புடையது.. வெற்றியாளர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தவறு இழைக்கலாம்; ஆனால் விட்டு விலகுவதில்லை..

# வெற்றியை அடையவும் அடைந்த வெற்றியை தக்க வைக்கவும் ஓடிக்கொண்டே இருப்பவன் தொடர் வெற்றியாளனாகிறான்.



தமிழ் விருந்து....செய்வன திருந்தச் செய்....





சிறிய விஷயங்களையே சிறப்பாக செய்ய இயலாதவர்கள் பெரிய விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுகிறாகள். சிறிதோ பெரிதோ செய்யும் செயலில் கருத்தூன்றி மன ஒருமையுடன் செயலாற்றுபவர்கள் வெற்றி காண்கிறார்கள்.


தமிழ் விருந்து....பட்டறிவே மெய்யறிவு...




எது அநுபவத்தில் அடையப் படுகிறதோ அதுவே அறிவிற்கும் உணர்விற்கும் அகப்படுகிறது. பெற்றோராகும் போதே பெற்றோரின் அன்பு உணரப்படுவது போல இறை நிலையை அடையும்போதே இறைத் தன்மை உணரப்படுகிறது. அநுபவத்தில் உணராத ஒன்றை புரிந்துகொள்வதோ புரியவைப்பதோ இயலாது.

தமிழ் விருந்து......உள்ளது உள்ளபடி....





தனக்கு எது தெரியும் எது தெரியாது என்பது எவனுக்குத் தெரிகிறதோ அவனே தெரியாததை தெரிந்துகொள்ள முயற்சிக்கிறான்.


தமிழ் விருந்து....வீழ்வேன் என்று நினைத்தாயோ....?



மனிதா நீ மகத்தானவன்....மண்ணில் பரம்பொருளின் உருவானவன்....!!



தமிழ் விருந்து......பொறுமையே வெல்லும்






பொறுமைசாலிகளிடம் தொல்லைகளும் பொறுமையிழந்து புறமுதுகிட்டு ஓடிவிடுகின்றன.

நினைவில் கலந்தவள்





நினைவெல்லாம் நீயானால்
நினை நினைக்காத பொழுது ஏது?

# கருங்குளம் மா.முருகன்

Tuesday, March 26, 2013

அகமும் புறமும் நீ


கண்ணுக்குள் மணியாக
பொத்திவைத்த பின்னும்
தழுவும் தென்றலும்
உன் வாசம் சுமப்பதென்ன...?
அகமும் புறமும் நிறைந்த
நீ தான் அன்புருவான இறையோ...?

# கருங்குளம் மா.முருகன்


கண்ணின் மணியே....



விழிக்குள் தங்கிய நின் பிம்பம்
விழி மூடிய பின்னும்
கனவாக கவிதையாக
என்றும் நீக்கமற என்னுள்....!!

# கருங்குளம் மா.முருகன்

உன்னால் முடியும்...



உன்னால் முடியாது என பிறர் சொல்வதை செய்து முடிப்பதுதான் வாழ்வின் பெருமகிழ்ச்சி.

# உன்னால் இதெல்லாம் முடியாது எனச் சொல்பவர்கள்தான் முடியாததையும் செய்து முடிக்கத் தூண்டுகிறார்கள்.

உயிரின் தவிப்பு...


என்னோடு நீ இருக்கும் தருணங்களில்
உன் படபடக்கும் விழிகள்
தோள் சேர விழையும்
நினதுயிரின் தவிப்பையும்
துடிதுடிப்பையும்
பறை சாற்றும் அழகை
விவரிக்க வார்த்தைகளால் கூடுமோ....?

#கருங்குளம் மா.முருகன்

அரிது ...அரிது...காதலனாய் எனைப் பெறல் அரிது...


பொன்னைக் கண்டதும்
மலர்ச்சியில் மின்னும்
முகம் பலருக்கு ...
என்னைக் கண்டதும்
கோடி மின்னல்
ஒளி வீசும் நின்
முகம் சொல்கிறது
பொன்னினும்
அரிதானவன் நானென்று....!!

# கருங்குளம் மா.முருகன்

மகிழ்ச்சியின் ஊற்று தன்னலமற்ற அன்பே...


ஒன்றைக்கொடுத்து இன்னொன்றைப் பெறுவது வியாபாரம். என் மீது அன்பு செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நிபந்தனையோடு அன்பு செலுத்துவதும் கூட சுயநலம்தான். நிபந்தனையின்றி அன்பை பொழிவது இயல்பாகிவிட்டால் என்றும் பேரின்பமே.

பெரிய ஆலமரம் அதன் சிறு வித்துக்குள்தான் ஒளிந்திருக்கிறது....


ஆயிரம் மைல்கள் நெடும்பயணமும் ஒரு ஒற்றை அடி முன்னெடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது.

# அளப்பரிய சாதனைகள் எல்லாம் சிறிய அளவில் தொடங்கியவைதான். சாதனைக்கு இட்டுச் செல்லும் பாதை தளர்வறியா விடாமுயற்சியே...!!

---கருங்குளம் மா.முருகன்


ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா....?


உலகிலுள்ள எல்லா அறிவையும் நமதாக்க முடியும். ஆனால் அவற்றைக் கொண்டு என்ன செய்வது என்ற பட்டறிவு இல்லையெனில் அவையெல்லாம் வீணே. -----மேரி ஓஸ்மாண்ட்

# பட்டறிவின் முன் ஏட்டறிவு எதுவுமில்லை. அநுபவத்தில் உணரப்படாதது எதுவும் அறிவுக்கு எட்டுவதில்லை. -----கருங்குளம் மா.முருகன்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

ஒருவர் பிறரைப் பற்றி உங்களிடம் எவ்வாறு பேசுகிறார் எனக் கவனித்துக் கேளுங்கள். அவ்வாறே அவர் உங்களைப் பற்றியும் பிறரிடமும் பேசுவார்.

# மனிதன் தன்னிடம் உள்ளதைத்தான் பிறரிடம் காண்கிறான். குறைபாடுடைய மனிதனுக்கே பிறருடைய குறைகள் தென்படுகின்றன. தனது குறைகளைக் களைந்து நிறை நிலையடைய முயற்சிக்கும் மனிதனுக்கு பிறரது நிறைகள் மட்டுமே தென்படுகின்றன.

கருங்குளம் மா.முருகன்

தன்னல மறுப்பே அன்பின் தொடக்கம்


பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகூட இல்லாமல் செலுத்தபடுவதுதான் தூய அன்பு. மனிதர்கள் இரசம் பூசப்பட்ட கண்ணாடி போன்றவர்கள். நீங்கள் அன்போடு சிரிக்கும்போது பதிலுக்கு கண்டிப்பாக சிரிப்பார்கள். ஒருவேளை உள்ளுக்குள் அழுதுகொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் சிரிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

எதுவும் சொந்தமல்ல...

நீரும் நெருப்பும் காற்றும் வானும் மண்ணும் அனைவருக்கும் பொதுவானவை யென்றாலும் உனக்கு எனக்கு என அடித்துக் கொள்ளும் மனிதன் இறுதியில் அவைகளுக்கே இரையாகிறான்.

எங்கே நிம்மதி..? எங்கே இன்பம்...?

தொடக்கத்திற்கும் முடிவிற்கும் மத்தியில் அதாவது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் எதில் இன்பம் எதில் இன்பம் எனத் தேடித் தேடி ஒடுவதே வாழ்க்கை.

Sunday, March 24, 2013

பேப்பர் காரர்



பேப்பர் காரர்
------------------------------------------------------------
தேதி தவறாமல்
வேளை தவறாமல்
வயிற்றுக்குச் சோறிட
தேதி தெரியாமல்
சேதி தெரியாமல்
தினசரிகள் விற்பதே
தினசரி பிழைப்பானது
மழையிலும் பனியிலும்
வைகறையில் தொடங்கும் உழைப்பு
பிழையிலாது தொடர்வதே பிழைப்பானது.
---------------------------------------------------------------
# கருங்குளம் மா.முருகன்
---------------------------------------------------------------


முத்தத் தவம்



ஈருயிர்கள் ஓருயிராய்
உருமாறும் முத்தத் தவத்தில்
பிரபஞ்ச மனைத்தும்
பொடிப் பொடியாகி மறைய
பேரின்பப் பெருவெளி
எல்லையில்லாது விரிய
என்னை நானும்
உன்னை நீயும் இழந்து
ஜீவன் முக்தர்களாகிறோம்.
காலாதீதமாய் ஓருயிராய்
இதழ் பிரியாதுயிர் பருகும்
முத்தத் தவத்தில்
நிலை கொள்வோம் என்றென்றும்....!!

# கருங்குளம் மா.முருகன்

காதல் சிறை



காதல் சிறையில்
ஆயுள் கைதியாய்
இல்லை இல்லை
ஆயுள் கடந்த பின்னும்
கைதியாய் நான்....!!

# கருங்குளம் மா.முருகன்

கவியின் வித்து


என் கற்பனைக்கு
சிறகு கொடுப்பவள் நீ
உன் மீதான காதல்
என் மொழிக்கு
இளமை தந்து
துள்ளி வரும்
கவியருவியாய்க் கொட்டுகிறது.
பெண்ணே நீ
கவிஞனைப் பிரசவிக்கும்
கன்னித் தாய்.
ஆதியொடு அந்தமிலாக்
காதலும் கன்னித் தமிழும்
பால்ய சினேகித முடையவை போலும்.
ஒன்று வந்தால் இன்னொன்றும்
கூடவே வந்துவிடுகிறதே....!!

# கருங்குளம் மா.முருகன்

Saturday, March 23, 2013

ஆழ்ந்துசெல் அரிய முத்தெடுப்பாய்


படைத்திட நின் மனம் ஒன்றிட வேண்டும்
கிடைத்திடும் நேரம் உன்னுள் ஒன்றிடு
ஆர்ப்பரிக்கும் அக அலை கடல் தனிலே
ஆழ்ந்து செல் அரிய முத்தெடுப்பாய்...!!

# கருங்குளம் மா.முருகன்

காதல் புதைகுழி



காதல் புதை குழியில்
மீளா போதையில் மெல்ல மெல்ல
எனை இழந்து நின் கரம்பற்றி
புதையுண்டு போகிறேன்.
சொர்க்கம் நரகம் இரண்டையும்
மாறி மாறி துய்த்துணரும் தருணம்
காதலிலன்றி வேறு எங்கு கிட்டும்...?
காதல் புதைகுழியிலிருந்து
மீண்டு வர விருப்பமில்லை எமக்கு...
அதன் அடியாழத்தில் ஓடும்
அமிழ்த நதியில் மூழ்கிக்
காலம் கடந்த மெய்த் தவத்தில்
சித்தி பெறுவோம் ஓருயிராய்....!!

# கருங்குளம் மா.முருகன்

ஊமையாக்கிய விழி மொழியாள்....

உன் விழிப் பேச்சை
வெல்லும் சக்தி
என் வாய்மொழிப்
பேச்சுக்கு இல்லையடி
வியப்பில் வாய்பிளந்து நிற்கிறேன்
எனை முழுதாய்
கொள்ளையடித்து விட்டாயடி
விழிமொழிப் புலமை கொண்ட
கள்ளி நீ... என் இதயவானில்
என்றும் மின்னும் வெள்ளி நீ....!!

# கருங்குளம் மா.முருகன்

சொல்லில் அடங்கா வலி

மனதின் வலியைச் சொல்ல
கண்ணீரை விட வலிமையான
வார்த்தைகளும் உண்டோ?

# கருங்குளம் மா.முருகன்

தென்றல் சுமந்து வந்த தேவதை


உனைத் தழுவும்
தென்றல் எனைத்
தழுவிச் செல்லும் போது
காதில் கிசுகிசுக்கிறது
உனை என்னிடம்
கொண்டு சேர்த்ததாக.....!!

# கருங்குளம் மா.முருகன்