Friday, June 11, 2010

பிரச்சினைகள் , கவலைகள் சூழ்ந்த உலகத்தில் அவற்றையெல்லாம் அண்டவிடாமல் நகைச் சுவை உணர்வோடு எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக வலம் வருவபவரா நீங்கள்? உங்கள் பெண் தோழி அல்லது மனைவியோடு நகைச் சுவைத் துணுக்குகளைப் பரிமாறி வெடிச் சிரிப்போடு விளையாடி மகிழ்பவரா? உங்கள் குழந்தைகளை கிச்சு கிச்சு மூட்டி குதூகலம் காண்பவரா? எப்போதும் நகைச் சுவைத் தொலைகாட்சி நிகழ்சிகளையே பார்த்து ரசிப்பவரா? ஆம் எனில் நீங்கள் நீண்ட காலம் நோய் நொடிகளின்றி இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வீர்கள் என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவு.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிப்பதாவன:


  • நகைச் சுவை உணர்வும் சிரிப்பும் மன அழுத்தத்தைத் தூண்டும் அட்ரீனலின் என்ற ஹார்மோன் சுரப்பைக் குறைக்கிறது.
  • இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • T-செல்களின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
  • மண்டை தசைகளுக்கு பயிற்சி அளித்து இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால்உங்களை விழிப்புணர்வு மிக்கவராக்குகிறது.
மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இது போன்ற ஆராய்ச்சி முடிவுகளை நெடுங்காலத்திற்கு முன்னரே நமது முன்னோர்கள் வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போச்சு என எளிமையாக பழகு தமிழில் கூறிவிட்டு சென்றுள்ளனர். எனவே எப்போதும் நீங்களும் சிரித்து சுற்றியிருப்பவர்களையும் சிரிக்கவைத்து நீடூழி வாழ்வாங்கு வாழ்வீர்களாக.

No comments:

Post a Comment