Monday, December 31, 2012




                    இதழில் இதழால் வார்த்தைகளைத் தேடி என்னவள்
                    வயிற்றுச் சிப்பியில் வார்த்தெடுத்த கவிமுத்தே நின்
                    பொக்கைவாய் சிரிப்பில் மனம் தக்கையாய் மிதக்குதடா
                    வெக்கையாய் வானம் வறண்டபோதிலும் நின்
                    மதி முகவதனம் கண்டு மனங்குளிர்கிறேனடா...!!!
மோடி மஸ்தான் மாயமல்ல நின் வெற்றி
வாடி நின்ற மக்கள் மனந்தனில் வளமைப்
பால் வார்த்த நினதாட்சியின் மாட்சிமை
தேடித் தந்த வெற்றியிது தேசமெங்கும்
பேடியெனப் பிதற்றும் அறம்சாரா போலிகளின்
நாடியெலாம் ஒடுங்கிடவே தலைமையேற்க வா
பார் அதன் தலைமையைப் பாரதம் ஏற்றிட
பாரதத் தாயின் தலைமகனே பரிவுடனே வா...!!!

-கருங்குளம் மா.முருகன்
அழகே
நாணத்தில்
நீ அழகா.....
உன்னில்
நாணம் அழகா....
வெள்ளை
ரோஜா
சிவப்பு
ரோஜாகவாக
மாறும் அழகை
உன்னெழில்
முகத்தில்
காணக்
கண் கோடி
வேண்டுமடி
அழகோவியமே.....!!!

-கருங்குளம் மா.முருகன்
பாதை இட்டுச் செல்லும் திசை நோக்கிப் பயணிக்கிறேன்
போகுமிடமும் அறிகிலேன் யான் கண்ணுருபவற்றை
ரசிக்கிறேன் கற்களும் முட்களும் பசும்புல் தடங்களும்
புயலும் தென்றலும் வெம்மைக் கதிரோனும் இளவேனில்
குளுமையும் அனைத்திலும் இனிமையைக் காண்கிறேன்
பாதையின் போக்கில் வாழ்க்கைப் பாதையின் போக்கில்
என்னைத் தேடுகிறேன் என்னைக் கண்டுணரும் கணம்வரை
தொடரும் இப்பயணம் என்று நிறைவுறுமென்பது மறிகிலேன்...!!!

-கருங்குளம் மா.முருகன்
நகைமுகியே
உன் குறுநகைப்
பொலிவின்முன்
வைரமணி மாலையும்
பொலிவிழந்து போகிறதடி....!!!

-கருங்குளம் மா.முருகன்
காணும் பொருள் யாவிலும்
அழகை ரசிக்கிறது காதல் மனம்
புன்னகை எப்போதும் இதழ்களில்
பொன்நகையாய் அணி செய்கிறது
காதல் களியுவகையில் எவ்வுயிரும்
சாதல் மறக்கிறது புத்துயிர் துளிர்க்கிறது....!!!

-கருங்குளம் மா.முருகன்
நமக்கு மட்டுமே
புரியும் மொழி
மௌன மொழி
அதுவே நம் காதல் மொழி
விழிப் பேச்சும் மோன
உயிர் பேச்சும் காதல்
மொழிப் பேச்சானதடி
கவியே..!!! கவிமதுரசமே....!!!

-கருங்குளம் மா.முருகன்
உனைக் கண்களால்
பருகும் தருணம்
கள்ளுண்ட போதையில்
பேதையே எனையே
இழக்கிறேன்...யான்..!!!

-கருங்குளம் மா.முருகன்
என் ஒவ்வொரு
அணுவிலும் நின்
நினைவின் ஆக்கிரமிப்பு....!!!
நின் நினைவில் மூழ்கித்
திளைக்கும் பரவச
தருணங்களில் தாய்மொழியும்
மறந்து போகிறேனடி கிளியே......!!!

-கருங்குளம் மா.முருகன்
பூக்கள் கூட
அழகாகின்றன
நீ சூடியதால்....!!!
கண்ணில் கோடி மின்னல் காட்டும்
வண்ண நிலாப் பெண்ணே உன்னழகை
விவரிக்க வார்த்தையேது மில்லாது
மொழிகளெலாம் நாணுவதை நீயுமறியாயோ,,,,!!!

Wednesday, December 19, 2012

முத்த நீரூற்றி
மோக உரமிட்டு
ஐயக் களையெடுத்து
ஆசை ஆசையாய்
காதல் பயிர் வளர்த்தோம்....!!!
நம் பசுமைக் காதலில்
வறட்சியென்பதே
இல்லை...!!!
இந்த வளமைக்
காதல்
வேளாண்மை
மண்ணுள்ளவரை
உயிர்ப்புடன்
வாழுமடி
வாசமலரே....!!!
ஒவ்வொரு முறையும்
உன்னையே சுவாசிக்கிறேன்
என் இதயத்தில் நீ நிறைந்த
இன்பக் கதகதப்பின் வெம்மையே
என் நாசிவழி வெளிப்படுகிறது......!!!
பூக்கள் சொரியும் மர நிழலில்
பூதேவியின் மலர் மடியில்
மெய்மறந்த மெய்த் தேடலில்
சுகிக்கின்ற உணர்வும் நீயே
தகிக்கின்ற உணர்வும் நீயே...!!!
உன்
மௌனம்
உயிர்வதை
செய்யும் கொடும்
ஆயுதம்....!!!
அதைக் கீழே போட்டுவிடு...!!!
உன் செவ்விதழ்
திறந்து பேசு...!!!
சுடுசொற்களே ஆயினும்.....
அவையே என்
ஜீவனைத் தாலாட்டும்
இனிய கீதம்
ஆகுமடி....!!!
உன் நினைவு
அவ்வப்போது
எட்டிப்பார்க்கிறது
இதழோரத்தில்
புன்னகையாய்...!!!
கண்ணில் நீ
கருத்தில் நீ
கனவில்  நீ
ஊனில்   நீ
உயிரில்  நீ
எங்கும்   நீ
எதிலும்   நீ
என்றென்றும்
என்னோடு நீ..!!!
ஓயாத
முத்த யுத்தத்தில்
வெற்றியை ருசிப்பது
நீயோ நானோ
அல்ல
நம் காதல்....!!!
எவ்வுருவிலும்
பிரபஞ்சத்தின்
எக்கிரகத்திலும்
நீ பிறப்பெடுத்தாலும்
காற்றிலும்
வெளியிலும்
கலந்து
எக்காலமும்
உன்னையே
சுற்றிச் சுழலும்
உன்னைக் குறித்த
என் நினைவுகள்....!!!
இரவிலும்
பகலிலும்
என்னுள்
காலாதீதமாய்
உறங்காமல்
விழித்துக்
கொண்டிருக்கின்றன
உன் நினைவுகள்...!!!
நிலவாய் நீயிருக்க
உனை ஈர்க்கும்
புவியாய் நான்...!!!
உன் விரல்
தீண்டலை விட
உன் விழித் தீண்டல்
எனைக் கொல்லுதடி.....!!!
சிரிப்பிலும்
சிலிர்ப்பிலும்
கண்ணீரிலும்
உயிர்ப்போடு
உன் மீதான
என் காதல்
எப்போதும்
உன் நினைவில்
உருகிப் பிரவகிக்கிறது
ஜீவ நதியாய்.....!!!
உன் நினைவைப்
பூட்டிவைக்கிறேன்
என்னுள்...
என்னைத்
தொல்லை
செய்யாதேயென்று
இருந்தாலும்
திமிறிக் கொண்டு
வெளிப்படுகிறது
கண்களில்
தாரை தாரையாய்....!!!
அகமும் புறமும் நீயே...!!!
உன்னைக் கண்ட நாள் முதலாய்
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...!!!
எங்கே நான்...?
என் இமைகள்
திறப்பதே
உன்னைக்
காணத்தான்....!!!
நான்
காண்பதனைத்துமே
நீயாகவே
தெரிகிறாய்...!!!
அகமும் புறமும்
இகமும் பரமும்
யாவுமாகி நிற்கிறாய்
இன்னுயிரே....!!!
உன்
ஈரப் புன்னகையில்
என் இதயம் மலர்கிறது
கதிரவன் கரம் தொட்ட
கமலம் போல.....
உன்னைக் காணும்
தருணம்
நான் பிறக்கிறேன்
பிரியும்
தருணம்
இறக்கிறேன்....!!!
உன்னோடு
இருக்கும்
தருணம்
உயிர் வாழ்கிறேன்
முத்தொழிலும்
புரியும் நீயே
என் இறைவன்....!!!
முத்தப் பரிமாற்றத்தில்
சிவப்பது
உன் இதழ்கள் மட்டுமல்ல
கன்னங்களும்தான்....!!!
உன்னைக் குறித்த
தவத்தில்
என்னைக் கண்டுணர்ந்தேன்.....!!!
நீயாய்....
நானாய்....
யாவுமாய்....
என் உயிரில்
உறையும் உணர்வே....!!!
காதலுடன்
இல் அறவாழ்வில்
என் உயிராய் இயங்கி
வீடு பேறு நிலைக்கு எனை
நகர்த்திச் செல்ல
நீ இருக்க
வீடு துறந்து
காடேகும்
வானப் பிரஸ்தம்
ஏதுக்கடி ஏந்திழையே....!!!
வா.....!
வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வநிலை
பெறுவோம்......!!!
ஈர்ப்பு
தாழ்வழுத்தம்
நம் இதயக் கடலில்
மையம் கொண்டு
காதல் மழையாகி
நம் கல்யாண
கரை கடக்குமுன்
வலுவிழந்துபோனது
சேதாரம் எதுவுமின்றி....
பருவ காலங்களில் மட்டுமல்ல
உயிர்மூச்சு உள்ளளவும்
நம்மிடையே
ஈர்ப்பு தாழ்வழுத்தம்
நம் இதயக் கடலில்
எப்போதும்
மையம் கொள்வதும்
காதல் மழை பொழிவதும்
தொடர்கிறது.......!!!
கருத்துகள் மாறுபடலாம்
கொள்கைகள் மாறுபடலாம்
நம்பிக்கைகள் மாறுபடலாம்
கதம்ப மலர் மாலையைக் கோர்த்துத் தாங்கும்
கண்ணுக்குத் தெரியாத நார் போல.....
நட்பு நம் இதயங்களைப் பிணைக்கட்டும்...!!!
தூக்கம்
.........
இமைகள்
ஆரத் தழுவ
வெட்கத்தில்
கருவிழிகள்
ஓடி ஒளிந்துகொள்ள.....
மௌனத்தில்
புதைந்துபோயின
நினைவுகள்....!!!
எங்கும் இருள்......
என்னுள்
நம்பிக்கை
ஒளிக்கீற்று...!!!
நான் ஒற்றை
ஆள் அல்ல
என் நினைவுகளில்
நீங்காமல் நீ.....
தொடரும்
வாழ்க்கை
நெடும் பயணத்தில்
எப்போதும்
என் கரம் கோர்த்து நீ...
முடிவிலாப் பயணம்
முடிவிலா நம்
தீராக் காதலோடு......!!!
உன் விழி பேசும்
மௌன மொழி
எனக்கு மட்டுமே
புரிகிறது.......
அதன் வீரியத்தின் முன்
உலக மொழிகளெல்லாம்
தோற்றுப் போகின்றன
வார்த்தைகளைத் தேடி.......!!!
நீ வீசும் ஒற்றை விழி வீச்சில்
ஓராயிரம் மின்னல்கள்
என் உயிருக்குள்....!!!
உன் பார்வை அம்புகள்
என் இதயத்தை மட்டுமே
துளைக்கின்றன!!!
அதன் கூர்மை
என் உயிர் வரை
ஊடுருவுகிறது!!!
தென்றலின்
வருடலும்
நீயே!!!
உன் பிரிவின்
வலி அழுகையாய்....
உன் நினைவின் வசந்தம்
புன்னகையாய்....
ஒழுக்கம் மட்டுமல்ல
உலகமும் மறந்து போகிறது
எனக்கு.....
உன்னோடு இருக்கும்போது!!!
கனவிலும்
நனவிலும்
நினைவிலும்
நீயே
நிறைந்திருக்கிறாய்!!!
தூங்கும் போதிலும்
நீங்காது
என்னுள் உறைகிறாய்
பாலில் நெய் போல....
உணர்வில்
உயிரில் கலந்த
உறவே!!!
பிறவாப் பேறு பெற்றுய்யும் வரை
என் உயிராய் நீ வேண்டும்!!!
உன் விழி ஈர்ப்பு விசையில்
உனைச் சுற்றி வருகிறேன்
இரவியைச் சுற்றிவரும்
புவி போல.....
கண்ணும் இமையும் போல
மண்ணும் மரமும் போல
இதயமும் துடிப்பும் போல
உதயமும் பகலவனும் போல
நிலவும் குளிர்க்சியும் போல
மலரும் மணமும் போல
உயிரில் கலந்து உறவில் கலந்து
உலகம் போற்ற வாழ்வாங்கு வாழ்வீராக!!!
"குப்பையைத்
தொட்டியில்
போடவும்"
இவ்வாசகத்தோடு
குப்பைத் தொட்டி!!!
அருகே
குன்றாய்
குவிந்து
நின்றது
குப்பை!!!
தொட்டியைக்
குப்பையில்
போடவும்!!!
ஓடிக் கொண்டே
இருக்கிறது
வாழ்க்கை!!!
ஒரு நதி போல....
என்னைக்
குறித்த
தேடுதல்களோடு......
நதி தன்
சுயம்
இழந்து
பெருங்கடலாதல் போல்
பேரறிவுப் பெருவெளியே!!!
நினைச் சேர்தல்
எக்காலம்......?
முழு மதியே!!!
நீ வளர்வதும்
தேய்வதும்
காட்சிப் பிழையன்றோ?
வெம்மையை
உள்வாங்கி
தண்ணிழல்
பரப்பும்
நீயே
என் கவியின்
ஜீவ ஊற்று!!!
வித்தும் நீ
விருக்ஷமும் நீ
விழுதும் நீ
உனைத் தாங்கும்
நிலம் நான்!!!
உன் இதயம்
பொழிந்திடும்
காதல் மழை
என் உயிர்
நனைத்திடும்
அமுத நதி
உனைக் குறித்த
என் தியானமும்
தவமும்
ஒருபோதும்
முடிவுறுவதில்லை!!!
அதுவே
எனக்கு
ஜீவன் முக்தி!!!
தோழியாய்...
காதலியாய்...
தாரமாய்...
தாயாய்....
சேயாய்....
தெய்வமாய்...
ஏன் யாதுமாய்
நீ!!!
எப்போதும் உன்னோடு
நான்!!!
நெருப்பு
சுடவில்லை
நெருஞ்சி
முள்ளும்
குத்தவில்லை!!!
உன் நினைவு
தகிக்குதடி!!!
நெருஞ்சி
முள்ளாய்
குத்துதடி!!!
மையலை
விழி வழி
சிந்தும்
தையலே
பொய்யிலை
உன்
இதழ்களால்
அல்ல
விழிகளால்
என் உயிர்
பருகுகிறாய்!!!
உன் விழி சிந்தும்
உள்ளொளியில்
இருண்ட தமிழகமும்
ஒளி பெறும்!!!
தாய்..... உணர்வு
தந்தை.... அறிவு
இதயம்.... உணர்வு
மூளை......அறிவு
ப்ரக்ருதி......உணர்வு
புருஷன்......அறிவு
மாயை........உணர்வு
பிரம்மம்......அறிவு
அறிவிலிருந்து உணர்வும்
பிரம்மத்திலிருந்து மாயையும்
தோன்றினாலும்
இரண்டும்
ஒன்றுதான்!!!
அறிவில் உணர்வு
ஒடுங்கிப்போகிறது!!!
பிரம்மத்தில்
பிரக்ருதி
ஒடுங்கிப்போகிறது!!!
அறிவில் ஒன்றாகத் தெரிவது
உணர்வில் இரண்டாகத் தெரிகிறது!!!
பிரம்மத்தில் ஒன்றாகத் தெரிவது
மாயையில் இரண்டாகத் தெரிகிறது!!!!
நீயே
கவிதையானால்
தமிழால்
உனை
பூசிப்பேன்....
என் உயிரை
உனதாக்கி
உன் உயிரை
யாசிப்பேன்...
சந்ததமும்
உனையே
யோசிப்பேன்....
நீ
இல்லை
நான்
இல்லை
நீயுமானவன்...
நானுமானவள்..
கலகலவென
சிரிப்பொலியாய்
முத்தச் சத்தம்....
மெல்ல ஒலியடங்கி
புன்னகையாய்...
உயிர்கள் இடம் மாற
இருமைகள் இல்லாத
அத்வைத மோனநிலை...
சிற்றின்பம் என்று
இதை யார் சொன்னது?
இதுவன்றோ துரியம்
துரியாதீதம்!!!
எந்தேகம் மீதினில் சந்தேகம் கொள்ளலாமா?- நீ
சந்தேகம் கொள்ளலாமா...?
பந்தாக உதைபடுவாய் நீ
பந்தாக உதைபடுவாய்!!!
சிந்தாது தேன்துளி உள்கொண்ட மலர்மொட்டு
செங்கதிர் கரம்பட்டு மலர்ந்திடுவேன்!
கண்டபடி சுற்றிவரும் வண்டினம் பருகிட
மண்டியிட்டு இதழ் விரியேன்!
வேண்டாத சந்தேகம் வாழ்வினையே பாழாக்கும்- படி
தாண்டாத பத்தினியைத் தீண்டாத தீயாக்கும்!!!
மரணம் என்பது முடிவல்ல!
மறவாதே மனிதா மறவாதே!
இறைதேடும் பயணத்தில் இடைவேளை!
சிறைவிட்டு மெய்யகச் சிறைவிட்டு
பிறைதொட்டு முத்தமிடும் விடுதலை!
குறைகளைந்து களைந்து களைத்துப்போய்
நிறையைத்தேடி நிம்மதித் தூக்கம்!
சருகுகள் உதிர்ந்திட தளிர்கள் தோன்றிடும்!
மரணம் என்பது முடிவல்ல!
மறவாதே மனிதா மறவாதே!
காற்றோடு கலந்திட்ட காவியமே
கண்ணில் நிழலாடும் ஓவியமே
உயிருக்குள் பூகம்பம் வெடிக்குதடி
உன் நினைவில் என் இதயம் துடிக்குதடி!!!
தனிமையில்
ஏகாந்தப்
பெருவெளியில்
மலைமுகட்டில்
நின்று
சூழ்ந்த பசும்புல்
வயல்வெளிகளின்
எழிலில்
எனைக் கரைத்து
பிரபஞ்சத்தின்
மையப்புள்ளியில்
காணாமல் போகும்
அந்தத்தருணத்திலும்
ஒளி சிந்தும் உன்
விழி வழியே
புன்னகைத்து நிற்கிறாய்!!!
பிரபஞ்ச மையத்தின்
பேரானந்த பேரலையும்
நீ தானோ......?
நீயே
என்
ஆக்ஸிஜன்.....

என்
இதயம் கூட
உன் பெயரை
உச்சரித்தே
துடிக்கிறது!

பிரிவென்பது
எனக்கேது?
விழி எப்படி
இமையைப் பிரியும்.....
ஒளி எப்படி
இரவியைப் பிரியும்.....
வளி எப்படி
புவியைப் பிரியும்.....

என்னில் நீ
என்றும்
என் உயிரின்
உயிராய் நீ!!!
ஆனந்த ஊற்றே அமுதே ஆனந்தி
ஏனிந்த வாட்டம் எனைப் பிரிகையிலே
புந்தியில் ஊனில் உயிரில் புகுந்தெமைப்
                  பித்தனாக்கிவிட்டாய்!
எந்தைசெய் தவப்பயன் உந்தனை அடைந்திட்டேன்
விந்தை நீ விளைத்திட்ட மாற்றம் எம் சிந்தையில்
பந்தம் நீ பாசம் நீ பரவிடும் மோகம் நீ
சொந்தம் நீ சோகம் நீ சுகம் தரும் மோட்சம் நீ
காந்தம் இரும்பொடு கட்டிக்கலப்பது போல்
சாந்தம் தவழும் ஆனந்தப் பூங்காற்றே
எந்தன் நினைவை வருடி நின்மயமாக்கிவிட்டாய்!
எத்தனை பிறவிகள் இம்மண்ணில் வந்துதித்தாலும்
வித்தகியே வேண்டும் நீ எனக்கு பிறிதொன்றும் வேண்டேன்!!!
பொய்மையும் புரட்டும் புயலெனப் பரவும்
மெய்மையின் மகிமை மெல்லென மலரும்
சூதும் வாதும் விரைந்தே வென்றிடும்
நீதியும் நேர்மையும் நின்றே நிலைபெறும்
கணநேரம் ஒளிர்ந்து கருகி மறைந்திடும்
       -(அஸ்டிராய்ட்) எரிநட்சத்திரமாயன்றி
தினம்தோறும் ஒளிர்ந்திடும் சூர்யர்களாவோம்
இடி இடிப்பதும் கொடி படர்வதும்
வடி வுருவதும் வளர்ந் தெழுவதும்
துடி யிடையின் முன் அடிபணிவதும்
பிடி மண்ணாகியே செடி முளைப்பதும்
குடி உயர்வதும் கொடை சரிவதும்
மடி கனப்பதும் படி இழப்பதும்
வடி வுடையாளின் திருவுளப்படிக்கே!!!