Wednesday, December 19, 2012

எந்தேகம் மீதினில் சந்தேகம் கொள்ளலாமா?- நீ
சந்தேகம் கொள்ளலாமா...?
பந்தாக உதைபடுவாய் நீ
பந்தாக உதைபடுவாய்!!!
சிந்தாது தேன்துளி உள்கொண்ட மலர்மொட்டு
செங்கதிர் கரம்பட்டு மலர்ந்திடுவேன்!
கண்டபடி சுற்றிவரும் வண்டினம் பருகிட
மண்டியிட்டு இதழ் விரியேன்!
வேண்டாத சந்தேகம் வாழ்வினையே பாழாக்கும்- படி
தாண்டாத பத்தினியைத் தீண்டாத தீயாக்கும்!!!

No comments:

Post a Comment