ஆனந்த ஊற்றே அமுதே ஆனந்தி
ஏனிந்த வாட்டம் எனைப் பிரிகையிலே
புந்தியில் ஊனில் உயிரில் புகுந்தெமைப்
பித்தனாக்கிவிட்டாய்!
எந்தைசெய் தவப்பயன் உந்தனை அடைந்திட்டேன்
விந்தை நீ விளைத்திட்ட மாற்றம் எம் சிந்தையில்
பந்தம் நீ பாசம் நீ பரவிடும் மோகம் நீ
சொந்தம் நீ சோகம் நீ சுகம் தரும் மோட்சம் நீ
காந்தம் இரும்பொடு கட்டிக்கலப்பது போல்
சாந்தம் தவழும் ஆனந்தப் பூங்காற்றே
எந்தன் நினைவை வருடி நின்மயமாக்கிவிட்டாய்!
எத்தனை பிறவிகள் இம்மண்ணில் வந்துதித்தாலும்
வித்தகியே வேண்டும் நீ எனக்கு பிறிதொன்றும் வேண்டேன்!!!
ஏனிந்த வாட்டம் எனைப் பிரிகையிலே
புந்தியில் ஊனில் உயிரில் புகுந்தெமைப்
பித்தனாக்கிவிட்டாய்!
எந்தைசெய் தவப்பயன் உந்தனை அடைந்திட்டேன்
விந்தை நீ விளைத்திட்ட மாற்றம் எம் சிந்தையில்
பந்தம் நீ பாசம் நீ பரவிடும் மோகம் நீ
சொந்தம் நீ சோகம் நீ சுகம் தரும் மோட்சம் நீ
காந்தம் இரும்பொடு கட்டிக்கலப்பது போல்
சாந்தம் தவழும் ஆனந்தப் பூங்காற்றே
எந்தன் நினைவை வருடி நின்மயமாக்கிவிட்டாய்!
எத்தனை பிறவிகள் இம்மண்ணில் வந்துதித்தாலும்
வித்தகியே வேண்டும் நீ எனக்கு பிறிதொன்றும் வேண்டேன்!!!
No comments:
Post a Comment