Wednesday, December 19, 2012

கலகலவென
சிரிப்பொலியாய்
முத்தச் சத்தம்....
மெல்ல ஒலியடங்கி
புன்னகையாய்...
உயிர்கள் இடம் மாற
இருமைகள் இல்லாத
அத்வைத மோனநிலை...
சிற்றின்பம் என்று
இதை யார் சொன்னது?
இதுவன்றோ துரியம்
துரியாதீதம்!!!

No comments:

Post a Comment