கல்லாத கல்வித் தந்தைகளிடம் இல்லாத இலட்சுமி கடாட்சமா..? சரஸ்வதியின் அருள் தமக்கு கிட்டாவிடினும் பிறருக்கு கிட்ட தரகராய் இருந்து இலட்சுமியின் அருள் நிரம்பப் பெற்றவர்கள்...!! கலை மகளை விலை மகளாக்கி கல்லா கட்டும் நவீன மாமாக்கள்...!!
மகனின் பிறந்த நாளில் செய்த நெய்க் கேசரியை நீரிழிவைக் காட்டி கண்ணில் காட்டாத மனைவி தொலைக்காட்சித் தொடரில் மூழ்கியிருந்த வேளையில் அடுப்படியில் அடங்கா ஆசையுடன் ஒரு கரண்டியளவு எடுத்து சுவைத்த போது...
வேண்டாம் விடுங்க உடம்பெல்லாம் வலியென மனைவி தடுத்த போதும் வெறி கொண்டு குதறி கதறிட சுகித்த போது....
கோடானு கோடி மக்கள் ஒரு வேளை உணவுமின்றி பட்டினியில் வாட..... வறுமையைப் போக்க பயன்பட வேண்டிய அரசு பணம் ஊழலில் மடை மாற்றம் செய்யப் பட்டு அரசியல் வாதியின் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படும் போது....
ஆண் குழந்தை ஒன்று வேண்டுமென பத்து பெண் குழந்தை அடுத்தடுத்து பெற்றபின்னும் ஆசையுடன் அடுத்தொரு முயற்சியாக அள்ளியணைக்கும் இணைகளின் காதல் போர் முடிவின் போது....
வாழ்வின் முற்றுப் புள்ளி மரணமதை சற்றுத் தள்ளி வைத்திடவே விருப்பம் எல்லோருக்கும்.. முக்காற் புள்ளியாய் மரணத்தின் பின்னும் வாழ்க்கை தொடர்வதாய் கேட்டிருந்தாலும் மரணமிலா வாழ்வே இயல்பென்பதால் இல்லாது போதல் என்பதே இல்லாது போய்விட நில்லாது தேடிடும் வாழ்க்கைப் பயணம்..!! முற்றுப் புள்ளி என்பதே சற்றுத் தள்ளி மாய்மாலம் செய்யும் கானல் நீரே... மரணம் முற்றுப் புள்ளியல்ல... சற்றுத் தள்ளிப் பெறும் ஆசுவாசம்...!!
காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போயின.. நீயும் நானும் சிறு வயதில் நெருங்கிப் பழகிய உயிர் நேசம் நினைவுகள் மட்டும் பசுமையாய்... காலம் நேசத்துக் குரியவர்களை இடம் மாற்றி வைத்துச் செல்கிறது.. ஆனாலும் இதயத்தின் ஒரத்தில் இன்னமும் இருக்கிறாய்... ஈரம் காயாத நினைவுகளாய்...!!
சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும் இவர் மட்டை பட்டதெல்லாம்... ரன்னாகும்.... இவர் தோற்றத்தில் தான் வாமனர் இவர் மட்டை சுழற்றும் போதிலோ ஓங்கி உலகலந்த உத்தமர் பாரதத் தாயின் மணி மகுடத்தில் என்றும் மின்னும் வைரம் மட்டைப் பந்தாட்டம் என்பதன் மறு பெயராய் வாழ்ந்திட்ட தெண்டுல்கர் உனக்கு ஓய்வென்பதே இல்லை.. இனிவரும் கிரிக்கெட்டர்களின் உந்து சக்தியாய் என்றென்றும் நிலைபெறும் நின் பெயர்.. வாழ்க சச்சின்... கடைசி கிரிக்கெட் இரசிகன் உள்ளவரை...!
மேகக் காதலனைக்
கரம்பற்றிய மகிழ்ச்சியில்
வானமகள் வடிக்கும்
ஆனந்தக் கண்ணீராய்
பூமகளின் உயிர் வளர்க்கும்... அமுத மழையே...!! மாதம் மும்மாரி பொழிந்த நீ ஆண்டின் சில நாட்கள் மட்டும் அரிதாகிப் போனதென்ன..? அகத்திற்கு அரிதாரம் பூசாத அன்பு ததும்பி வழியும் அன்பர்கள் அரிதாகவே காணக் கிடைப்பதாலா..?
அவள் வாழ்க என்றாள்
காதல் தானே என்றான்
அவன் ஒழிக என்றான்..
காமம் தானே என்றாள்..
இல்லை...காதல் இல்லா ... காமம் என்றான் அவன்.. அவர்கள் வாழ்ந்தார்கள்.. கண நேர காமமாய் அல்ல; காலம் வென்ற காதலாய்...!!
பிரியத்தைப் போல
பெரும் கொடுமை யில்லை..
பிரியத்தை சொல்லில் செயலில்
உணர்வில் காட்டும்
பிரியத்திற் குரியோர் பிரிகையில்... நினைவிலும் உயிரிலும் உணர்விலும் மூச்சிலும் கலந்து வதைக்கும் பிரியத்திற் குரியோரின் பிரியத்தைப் போல் பெரும் கொடுமை யில்லை....!!
ஊரில் பிணங்கள்
வாழ்ந்து கொண்டிருக்க
இதுகாறும் பிணமாக வாழ்ந்த
உடலை சுடுகாட்டில் எரித்து
தம்மை தூய்மைப் படுத்திக் கொண்டிருக்கிறது ... அழியாத உயிர்... ஆனாலும் மனதின் அடியாழத்தில் படிந்துள்ள அழுக்குகளை பொசுக்கும் வழி தெரியாது மிரட்சியுடன் பயணமாகிறது ஓய்விற்குப் பின் மீண்டும் பிறந்து வினைப் பயனைத் தீர்க்க...!!
பசி, பட்டினி, ஊழல், வன்மம், வெறுப்பு இவையெல்லாம் இல்லாத புத்துலகம் வேண்டும்.. அன்பும் உண்மையும் ... அளவிலா தெங்கும் நிறைந்த இனியதோர் உலகம் வேண்டும். கொணர்வாயா புத்தாண்டே...? விடியாத நீள் இரவாய் முடியாத துயர் சூழ் உலகோடு நீ இங்கே எமக் கெதற்கு...? புத்தாண்டே போய்த் தொலை....!!