Wednesday, January 1, 2014

வரமாய் வந்தருளாயோ...






தன்னிலையில் இயங்கா இன்ப மோன நிலை
முன்னிலையில் இயங்கும் மாயா பெரும்சக்தி
முரணாய் இரண்டாய் பலவாய் தோன்றிடும்
அரணாய் அறிவாய் அனைத்துமாய் ஆனவளே
சரணாய் புகுந்திட்டேன் மாயைத்திரை எரித்து
பரமாய் உணர்வாய் வரமாய் வந்தருளாயோ



No comments:

Post a Comment