Wednesday, January 1, 2014

ஆதலினால் காதல் செய்வீர்..





காதலின் வலி
இன்பமா துன்பமா..?
இரண்டுமற்ற உணர்வா..?
காதலும் காதலின்
பெரு வலியும் இன்றேல்...
வாழ்வதன் நோக்கம்
வலுவிழந்து நடை பிணமாய்
உலவுவதும் வீண் தானே..
வாழ்வின் உயிர்ப்பும் பொருளும்
நிறைவடவது காதலில் அன்றோ..?
ஆதலினால் காதல் செய்வீர்..
இன்பம் துன்பம்
இரண்டுமற்ற பேரின்பம்
காதலில் முழுமை பெறுகிறது
காதலை போல் சாஸ்வதமாய்...!!

No comments:

Post a Comment