Wednesday, January 1, 2014

புத்தாண்டே போய்த் தொலை




பசி, பட்டினி, ஊழல்,
வன்மம், வெறுப்பு
இவையெல்லாம் இல்லாத
புத்துலகம் வேண்டும்..
அன்பும் உண்மையும் ...
அளவிலா தெங்கும் நிறைந்த
இனியதோர் உலகம் வேண்டும்.
கொணர்வாயா புத்தாண்டே...?
விடியாத நீள் இரவாய்
முடியாத துயர் சூழ் உலகோடு
நீ இங்கே எமக் கெதற்கு...?
புத்தாண்டே போய்த் தொலை....!!

No comments:

Post a Comment