Wednesday, January 1, 2014

வினைப் பயன்






ஊரில் பிணங்கள்
வாழ்ந்து கொண்டிருக்க
இதுகாறும் பிணமாக வாழ்ந்த
உடலை சுடுகாட்டில் எரித்து
தம்மை தூய்மைப் படுத்திக் கொண்டிருக்கிறது ...
அழியாத உயிர்...
ஆனாலும் மனதின்
அடியாழத்தில் படிந்துள்ள
அழுக்குகளை பொசுக்கும்
வழி தெரியாது மிரட்சியுடன்
பயணமாகிறது ஓய்விற்குப் பின்
மீண்டும் பிறந்து
வினைப் பயனைத் தீர்க்க...!!

No comments:

Post a Comment