Wednesday, January 1, 2014

வானவில்லைக் காணவில்லை..





வானவில்லைக் காணவில்லை....
வானத்தை வில்லாய் வளைப்பேன்
என வாக்களித்த அரசியல்வாதியை
நம்பி வாக்களித்த மக்களுக்குத் தெரியுமா..?
வான வில்லை மட்டுமல்ல...
வனங்களையும் வளங்களையும்
கொள்ளையிட்டு மழை பொய்க்கச் செய்து
கழனிகளைக் கட்டாந்தரையாக்கி
கட்டடங்கள் எழுப்பி விற்று
கட்டுக்கடங்காமல் சொத்து சேர்த்த
அரசியல்வாதி களெல்லாம்
சந்ததிக்கு விட்டுச் செல்வது
சோத்துக்கு வழியத்த சொத்தை உலகம் தானே...
சேர்த்த சொத்து பசியாற்றுமா..?
செத்தபின்னே சொத்தெதற்கு..?
பத்தடி சுடுகாட்டில் பத்தாதா...?



No comments:

Post a Comment