Wednesday, December 19, 2012

மரணம் என்பது முடிவல்ல!
மறவாதே மனிதா மறவாதே!
இறைதேடும் பயணத்தில் இடைவேளை!
சிறைவிட்டு மெய்யகச் சிறைவிட்டு
பிறைதொட்டு முத்தமிடும் விடுதலை!
குறைகளைந்து களைந்து களைத்துப்போய்
நிறையைத்தேடி நிம்மதித் தூக்கம்!
சருகுகள் உதிர்ந்திட தளிர்கள் தோன்றிடும்!
மரணம் என்பது முடிவல்ல!
மறவாதே மனிதா மறவாதே!

No comments:

Post a Comment