இருவர் ஒருவராகிப் பின்னிப் பிணைந்திட்டப் பொழுதுகளில் காற்றும் நாகரிகம் கருதி வெளியேறி நெருக்கத்தை இறுக்கமாக்குகிறது. அதனால் தான் பனியிலும் வியர்க்கிறோம் இன்பத் தேணுண்டு கிறங்கிக் கிடக்கையிலே...!!
பிறப்பு இறப்பில்லாத இறை உணர்வே காதல் நிறை நிலையில் தூய இறை உணர்வாம் பேரன்பே மானிடருள் வாத்சல்யமாய் பாசமாய் நேசமாய் பக்தியாய் இறங்கிப் பரிணமித்து காலாதீதத்தில் நிறை நிலையாய் முழுமையுறுகிறது எல்லையிலா நித்தியப் பேரன்புப் பெருவெளியில்....!!
யாரைப் புகழ்வேன் சிலையென அழகுற மிளிரும் உனைப் படைத்த பிரம்மனையா.. கருவியாக இருந்த உன் பெற்றோரையா ... அழகு என்ற சொல் கூட உன் அழகை விவரிக்கும் போது மட்டுமே அழகாகிறது...!!
காதலும் கவிதையும் துணையை நினைந்து அகத்தில் ஒருமுகப் படும் போது மட்டுமே அகப்படுகிறது. அகத்தில் ஒருமுகப்படும் போது அகத்திலுறையும் சிவத்தில் இலயிப்பதால் இறையுணர்வாம் காதலும் அது படடைக்கும் கவிதையும் பிறந்து பெருவேகத்தோடு கரைபுரண்டோடும் நதி பெருங்கடல் நடுவே கலந்து அமைதி கொள்வது போல் பேரமைதியில் சுகிக்கிறது....
என்னுள் வந்தாய்... என் நினைவுகளில் உன் கரம் கோர்த்து உன் சுவாசம் உண்டு உன் அணைப்பின் கதகதப்பில் திளைத்து உன்னோடு கணப் பொழுதும் பிரியாது வாழும் பெறும்பேறில் உண்ண மறந்து உறங்க மறந்து இடை நூலினும் மெல்லியதாய் ஆயிடினும் நினைவுகளில் நீங்காது வேண்டும் நீ....!!
துரோகத்தின் துணை கொண்டு ஒரு இனம் கருவறுக்கப் பட்டுவிட்டது. தொப்புள் கொடி உறவில் பூத்த தன்னல பதவி அது தரும் ஊழல் பெரும் பணம், அதிகாரம் எனும் துர்நாற்ற மலர்களாய் தமிழக அரசியல் வாதிகள் அத்துர்நாற்ற மலர்களை மாலையாக்கி அணிந்த தேசத்தைப் பீடித்த அன்னியப் பிசாசு இவர்களின் துரோகத்தில் விளைந்த ஆயுதம் கொண்டு தமிழ் இனத்தைக் கருவறுத்த புத்தனைப் பின்பற்றுவதாகப் பிதற்றும் போலி அஹிம்சாவாதிகளின் மாபாதகம் கண்டு புத்தனும் இழையோடும் மெல்லிய புன்முறுவலைத் தொலைத்து விட்டான். புத்தன் முகத்தில் மீண்டும் புன்முறுவலைக் காண்பதெப்போ...? வீழ்ந்த தமிழ் இனம் மீண்டும் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதெப்போ...?