Wednesday, January 1, 2014

சல்யூட் சச்சின்






 சிலர் தொட்டதெல்லாம்
பொன்னாகும்
இவர் மட்டை பட்டதெல்லாம்...
ரன்னாகும்....
இவர் தோற்றத்தில் தான் வாமனர்
இவர் மட்டை சுழற்றும் போதிலோ
ஓங்கி உலகலந்த உத்தமர்
பாரதத் தாயின் மணி மகுடத்தில்
என்றும் மின்னும் வைரம்
மட்டைப் பந்தாட்டம்
என்பதன் மறு பெயராய்
வாழ்ந்திட்ட தெண்டுல்கர்
உனக்கு ஓய்வென்பதே இல்லை..
இனிவரும் கிரிக்கெட்டர்களின்
உந்து சக்தியாய் என்றென்றும்
நிலைபெறும் நின் பெயர்..
வாழ்க சச்சின்...
கடைசி கிரிக்கெட் இரசிகன் உள்ளவரை...!

 

No comments:

Post a Comment