மேகக் காதலனைக்
கரம்பற்றிய மகிழ்ச்சியில்
வானமகள் வடிக்கும்
ஆனந்தக் கண்ணீராய்
பூமகளின் உயிர் வளர்க்கும்...
அமுத மழையே...!!
மாதம் மும்மாரி பொழிந்த நீ
ஆண்டின் சில நாட்கள் மட்டும்
அரிதாகிப் போனதென்ன..?
அகத்திற்கு அரிதாரம் பூசாத
அன்பு ததும்பி வழியும்
அன்பர்கள் அரிதாகவே
காணக் கிடைப்பதாலா..?
No comments:
Post a Comment