
வாழ்வின் முற்றுப் புள்ளி மரணமதை
சற்றுத் தள்ளி வைத்திடவே
விருப்பம் எல்லோருக்கும்..
முக்காற் புள்ளியாய்
மரணத்தின் பின்னும்
வாழ்க்கை தொடர்வதாய் கேட்டிருந்தாலும்
மரணமிலா வாழ்வே இயல்பென்பதால்
இல்லாது போதல் என்பதே இல்லாது போய்விட
நில்லாது தேடிடும் வாழ்க்கைப் பயணம்..!!
முற்றுப் புள்ளி என்பதே சற்றுத் தள்ளி
மாய்மாலம் செய்யும் கானல் நீரே...
மரணம் முற்றுப் புள்ளியல்ல...
சற்றுத் தள்ளிப் பெறும் ஆசுவாசம்...!!
No comments:
Post a Comment