Wednesday, January 1, 2014

மரணம் வென்று காதலாய் வாழ்வோம்...!!








உயிரும் உளமும்
விழியொடு பொருந்த
காந்தம் ஈர்க்கும் இரும்பாய்
விழியில் விழுந்து
உயிரில் உணர்வில்
மூச்சில் கலந்தவனே
நானே நீயாகிப் போனதால்
வீணே இன்னொரு உடலில்
நீ எதற்கு...?
வா...உடலால் உணர்வால்
உயிரால் இரண்டற்று
ஒன்றாகித் திளைப்போம்...!
மரணம் வென்று
காதலாய் வாழ்வோம்...!!

No comments:

Post a Comment