Wednesday, January 1, 2014

சாத்தான் சிரித்தான் சத்தமாக....!!






சாத்தான் சிரித்தான் சத்தமாக....!!

மகனின் பிறந்த நாளில் செய்த 
நெய்க் கேசரியை நீரிழிவைக் காட்டி
கண்ணில் காட்டாத மனைவி 
தொலைக்காட்சித் தொடரில்
மூழ்கியிருந்த வேளையில்
அடுப்படியில் அடங்கா ஆசையுடன்
ஒரு கரண்டியளவு எடுத்து சுவைத்த போது...

வேண்டாம் விடுங்க உடம்பெல்லாம் வலியென
மனைவி தடுத்த போதும் வெறி கொண்டு
குதறி கதறிட சுகித்த போது....

கோடானு கோடி மக்கள்
ஒரு வேளை உணவுமின்றி
பட்டினியில் வாட.....
வறுமையைப் போக்க
பயன்பட வேண்டிய
அரசு பணம் ஊழலில்
மடை மாற்றம் செய்யப் பட்டு
அரசியல் வாதியின் ஸ்விஸ் வங்கிக்
கணக்கில் வரவு வைக்கப் படும் போது....

ஆண் குழந்தை ஒன்று வேண்டுமென
பத்து பெண் குழந்தை
அடுத்தடுத்து பெற்றபின்னும்
ஆசையுடன் அடுத்தொரு முயற்சியாக
அள்ளியணைக்கும் இணைகளின்
காதல் போர் முடிவின் போது....

சாத்தான் சிரித்தான் சத்தமாக....!!

No comments:

Post a Comment