Monday, December 31, 2012
மோடி மஸ்தான் மாயமல்ல நின் வெற்றி
வாடி நின்ற மக்கள் மனந்தனில் வளமைப்
பால் வார்த்த நினதாட்சியின் மாட்சிமை
தேடித் தந்த வெற்றியிது தேசமெங்கும்
பேடியெனப் பிதற்றும் அறம்சாரா போலிகளின்
நாடியெலாம் ஒடுங்கிடவே தலைமையேற்க வா
பார் அதன் தலைமையைப் பாரதம் ஏற்றிட
பாரதத் தாயின் தலைமகனே பரிவுடனே வா...!!!
-கருங்குளம் மா.முருகன்
வாடி நின்ற மக்கள் மனந்தனில் வளமைப்
பால் வார்த்த நினதாட்சியின் மாட்சிமை
தேடித் தந்த வெற்றியிது தேசமெங்கும்
பேடியெனப் பிதற்றும் அறம்சாரா போலிகளின்
நாடியெலாம் ஒடுங்கிடவே தலைமையேற்க வா
பார் அதன் தலைமையைப் பாரதம் ஏற்றிட
பாரதத் தாயின் தலைமகனே பரிவுடனே வா...!!!
-கருங்குளம் மா.முருகன்
பாதை இட்டுச் செல்லும் திசை நோக்கிப் பயணிக்கிறேன்
போகுமிடமும் அறிகிலேன் யான் கண்ணுருபவற்றை
ரசிக்கிறேன் கற்களும் முட்களும் பசும்புல் தடங்களும்
புயலும் தென்றலும் வெம்மைக் கதிரோனும் இளவேனில்
குளுமையும் அனைத்திலும் இனிமையைக் காண்கிறேன்
பாதையின் போக்கில் வாழ்க்கைப் பாதையின் போக்கில்
என்னைத் தேடுகிறேன் என்னைக் கண்டுணரும் கணம்வரை
தொடரும் இப்பயணம் என்று நிறைவுறுமென்பது மறிகிலேன்...!!!
-கருங்குளம் மா.முருகன்
போகுமிடமும் அறிகிலேன் யான் கண்ணுருபவற்றை
ரசிக்கிறேன் கற்களும் முட்களும் பசும்புல் தடங்களும்
புயலும் தென்றலும் வெம்மைக் கதிரோனும் இளவேனில்
குளுமையும் அனைத்திலும் இனிமையைக் காண்கிறேன்
பாதையின் போக்கில் வாழ்க்கைப் பாதையின் போக்கில்
என்னைத் தேடுகிறேன் என்னைக் கண்டுணரும் கணம்வரை
தொடரும் இப்பயணம் என்று நிறைவுறுமென்பது மறிகிலேன்...!!!
-கருங்குளம் மா.முருகன்
Wednesday, December 19, 2012
உன்னைக் குறித்த
தவத்தில்
என்னைக் கண்டுணர்ந்தேன்.....!!!
நீயாய்....
நானாய்....
யாவுமாய்....
என் உயிரில்
உறையும் உணர்வே....!!!
காதலுடன்
இல் அறவாழ்வில்
என் உயிராய் இயங்கி
வீடு பேறு நிலைக்கு எனை
நகர்த்திச் செல்ல
நீ இருக்க
வீடு துறந்து
காடேகும்
வானப் பிரஸ்தம்
ஏதுக்கடி ஏந்திழையே....!!!
வா.....!
வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வநிலை
பெறுவோம்......!!!
தவத்தில்
என்னைக் கண்டுணர்ந்தேன்.....!!!
நீயாய்....
நானாய்....
யாவுமாய்....
என் உயிரில்
உறையும் உணர்வே....!!!
காதலுடன்
இல் அறவாழ்வில்
என் உயிராய் இயங்கி
வீடு பேறு நிலைக்கு எனை
நகர்த்திச் செல்ல
நீ இருக்க
வீடு துறந்து
காடேகும்
வானப் பிரஸ்தம்
ஏதுக்கடி ஏந்திழையே....!!!
வா.....!
வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வநிலை
பெறுவோம்......!!!
தாய்..... உணர்வு
தந்தை.... அறிவு
இதயம்.... உணர்வு
மூளை......அறிவு
ப்ரக்ருதி......உணர்வு
புருஷன்......அறிவு
மாயை........உணர்வு
பிரம்மம்......அறிவு
அறிவிலிருந்து உணர்வும்
பிரம்மத்திலிருந்து மாயையும்
தோன்றினாலும்
இரண்டும்
ஒன்றுதான்!!!
அறிவில் உணர்வு
ஒடுங்கிப்போகிறது!!!
பிரம்மத்தில்
பிரக்ருதி
ஒடுங்கிப்போகிறது!!!
அறிவில் ஒன்றாகத் தெரிவது
உணர்வில் இரண்டாகத் தெரிகிறது!!!
பிரம்மத்தில் ஒன்றாகத் தெரிவது
மாயையில் இரண்டாகத் தெரிகிறது!!!!
தந்தை.... அறிவு
இதயம்.... உணர்வு
மூளை......அறிவு
ப்ரக்ருதி......உணர்வு
புருஷன்......அறிவு
மாயை........உணர்வு
பிரம்மம்......அறிவு
அறிவிலிருந்து உணர்வும்
பிரம்மத்திலிருந்து மாயையும்
தோன்றினாலும்
இரண்டும்
ஒன்றுதான்!!!
அறிவில் உணர்வு
ஒடுங்கிப்போகிறது!!!
பிரம்மத்தில்
பிரக்ருதி
ஒடுங்கிப்போகிறது!!!
அறிவில் ஒன்றாகத் தெரிவது
உணர்வில் இரண்டாகத் தெரிகிறது!!!
பிரம்மத்தில் ஒன்றாகத் தெரிவது
மாயையில் இரண்டாகத் தெரிகிறது!!!!
எந்தேகம் மீதினில் சந்தேகம் கொள்ளலாமா?- நீ
சந்தேகம் கொள்ளலாமா...?
பந்தாக உதைபடுவாய் நீ
பந்தாக உதைபடுவாய்!!!
சிந்தாது தேன்துளி உள்கொண்ட மலர்மொட்டு
செங்கதிர் கரம்பட்டு மலர்ந்திடுவேன்!
கண்டபடி சுற்றிவரும் வண்டினம் பருகிட
மண்டியிட்டு இதழ் விரியேன்!
வேண்டாத சந்தேகம் வாழ்வினையே பாழாக்கும்- படி
தாண்டாத பத்தினியைத் தீண்டாத தீயாக்கும்!!!
சந்தேகம் கொள்ளலாமா...?
பந்தாக உதைபடுவாய் நீ
பந்தாக உதைபடுவாய்!!!
சிந்தாது தேன்துளி உள்கொண்ட மலர்மொட்டு
செங்கதிர் கரம்பட்டு மலர்ந்திடுவேன்!
கண்டபடி சுற்றிவரும் வண்டினம் பருகிட
மண்டியிட்டு இதழ் விரியேன்!
வேண்டாத சந்தேகம் வாழ்வினையே பாழாக்கும்- படி
தாண்டாத பத்தினியைத் தீண்டாத தீயாக்கும்!!!
ஆனந்த ஊற்றே அமுதே ஆனந்தி
ஏனிந்த வாட்டம் எனைப் பிரிகையிலே
புந்தியில் ஊனில் உயிரில் புகுந்தெமைப்
பித்தனாக்கிவிட்டாய்!
எந்தைசெய் தவப்பயன் உந்தனை அடைந்திட்டேன்
விந்தை நீ விளைத்திட்ட மாற்றம் எம் சிந்தையில்
பந்தம் நீ பாசம் நீ பரவிடும் மோகம் நீ
சொந்தம் நீ சோகம் நீ சுகம் தரும் மோட்சம் நீ
காந்தம் இரும்பொடு கட்டிக்கலப்பது போல்
சாந்தம் தவழும் ஆனந்தப் பூங்காற்றே
எந்தன் நினைவை வருடி நின்மயமாக்கிவிட்டாய்!
எத்தனை பிறவிகள் இம்மண்ணில் வந்துதித்தாலும்
வித்தகியே வேண்டும் நீ எனக்கு பிறிதொன்றும் வேண்டேன்!!!
ஏனிந்த வாட்டம் எனைப் பிரிகையிலே
புந்தியில் ஊனில் உயிரில் புகுந்தெமைப்
பித்தனாக்கிவிட்டாய்!
எந்தைசெய் தவப்பயன் உந்தனை அடைந்திட்டேன்
விந்தை நீ விளைத்திட்ட மாற்றம் எம் சிந்தையில்
பந்தம் நீ பாசம் நீ பரவிடும் மோகம் நீ
சொந்தம் நீ சோகம் நீ சுகம் தரும் மோட்சம் நீ
காந்தம் இரும்பொடு கட்டிக்கலப்பது போல்
சாந்தம் தவழும் ஆனந்தப் பூங்காற்றே
எந்தன் நினைவை வருடி நின்மயமாக்கிவிட்டாய்!
எத்தனை பிறவிகள் இம்மண்ணில் வந்துதித்தாலும்
வித்தகியே வேண்டும் நீ எனக்கு பிறிதொன்றும் வேண்டேன்!!!
Subscribe to:
Posts (Atom)