Monday, December 31, 2012

பாதை இட்டுச் செல்லும் திசை நோக்கிப் பயணிக்கிறேன்
போகுமிடமும் அறிகிலேன் யான் கண்ணுருபவற்றை
ரசிக்கிறேன் கற்களும் முட்களும் பசும்புல் தடங்களும்
புயலும் தென்றலும் வெம்மைக் கதிரோனும் இளவேனில்
குளுமையும் அனைத்திலும் இனிமையைக் காண்கிறேன்
பாதையின் போக்கில் வாழ்க்கைப் பாதையின் போக்கில்
என்னைத் தேடுகிறேன் என்னைக் கண்டுணரும் கணம்வரை
தொடரும் இப்பயணம் என்று நிறைவுறுமென்பது மறிகிலேன்...!!!

-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment