Thursday, June 13, 2013

முப்பொழுதும் உன் நினைவுகளில்.....





முப்பொழுதும் உன் நினைவுகளில்
மூழ்கி யிருந்ததால் எனைக் கடந்து
போவோர் வருவோ ரெலாம் கண்கள்
நோக்கினாலும் கருத்தில் பதியவில்லை.....
ஏனடா சுரத்தே இல்லாமல் பித்தாயிருக்கிறாய்
என உயிர் நண்பன் உலுக்கியபின் தான்
நனவுலகம் திரும்பினேன்.
உன் நினைவுகளுக்குத் தான்
எத்தகைய வல்லமை..?
எனை முழுதாக மந்திரத்தில்
மயக்க முற்றவனைப் போல்
கட்டிப் போட்டு விடுகின்றனவே....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment