
சந்தை இரைச்சலிலும் தன்னுள் ஒடுங்கி
பிரபஞ்சத்தின் தோற்றுவாயைத் தேடி விரிபவன்
சொல்லிலடங்கா சுகத்தில் திளைக்கிறான்.
அமைதி தவழும் கானகத்தில் தனிமையில்
புலன்களின் வழியே புற உலகில் சஞ்சரிப்பவன்
தனக்குள் பேரிரைச்சலுடன் கொந்தளிக்கும்
பெருங்கடலாய் அலைமோதித் தத்தளிக்கிறான்...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment