Friday, June 14, 2013

சொல்லிலடங்கா சுகம்




சந்தை இரைச்சலிலும் தன்னுள் ஒடுங்கி
பிரபஞ்சத்தின் தோற்றுவாயைத் தேடி விரிபவன்
சொல்லிலடங்கா சுகத்தில் திளைக்கிறான்.
அமைதி தவழும் கானகத்தில் தனிமையில்
புலன்களின் வழியே புற உலகில் சஞ்சரிப்பவன்
தனக்குள் பேரிரைச்சலுடன் கொந்தளிக்கும்
பெருங்கடலாய் அலைமோதித் தத்தளிக்கிறான்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment