Thursday, June 13, 2013

பேரன்பின் ஊற்று



 உயிரனைத்தின் தோற்றுவாய் பேரன்பின் ஊற்று
வெவ்வேறு திசைகளில் நதியாய் கிளை நதியாய்
பயணிக்கும் மானுடம் பாயும் மண்ணின் நிறத்தால்
வேறுபட்டாலும் தெளிந்த மூல இயல்புணர்ந்தால்
அறுபடுமே வெறுப்பெலாம் ஆனந்தமும் மலராதோ...!!

# கருங்குளம் மாமுருகன்



No comments:

Post a Comment