
குற்றாலச் சாரலாய்
உன் நினைவுகள் தாலாட்ட
நீயோ பருவ மழையாய்
வாராது பொய்த்தாய்
புயல் சின்னத்தைத்
தொடர்ந்து எப்போதோ பெய்யும்
வாராது வந்த மாமழையாய் வந்தாய்
அகம் குளிர்ந்தேன்
உன் அன்பு மழை பொழிவில்
வறண்ட என் அக நதியில்
கரை புரண்டோடும் வெள்ளப் பெருக்கு...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment