Wednesday, January 23, 2013

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தின வாழ்த்துப்பா


அடலேறென அரசியலில் வலம் வந்த  அடலே
தடாலடியாய் அணுவெடித்து தற்காப்பை வளர்த்தவனே
மடலவிழ்ந்த மொட்டுபோல மனங்கொண்ட நகையோனே
கடலனைய பொறுமையுடை பண்பாழிப் பெருந்தகையே
உடலாலும் உயிராலும் தேசமாய் வாழுகின்ற
பாரததாய் ஈன்றெடுத்த அருந்தவமே வையத்துள்
வாழ்வாங்கு வாழியவே நின்புகழ் வானுள்ளமட்டும்....!!!

No comments:

Post a Comment