Saturday, January 26, 2013


மேகத்தை
தூதனுப்பினேன்
பின்
இடியை
மின்னலை
மழையை
ஒவ்வொன்றாய்
தூதனுப்பிவிட்டு
காத்திருக்கிறேன்
உன் காதலறிய
மழை வெரித்த
நிர்மல
வானில்
ஈரக்காற்று
தழுவிச்
சொன்னது
உன் காதலை


-கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment