காணும் பொருள் யாவிலும் இறைவனைக் காணும் இந்தியத் தத்துவ மரபில் நம்பிக்கையுள்ள இந்த தேசத்து மக்களும் இறை நிந்தனை செய்பவரிடத்தும் இறைவனைக் காண்பதால் இறைவனைத் தூற்றுவோரையும் ஏற்றுக் கொள்கிறார்கள். சார்வாகம் என இறை மறுப்புக் கொள்கையும் இந்திய தத்துவ மரபில் ஒரு கூறாக உள்ளது நசிகேதன் எமனிடம் கேட்காத எந்தக் கேள்வியையும் இன்றைய நாத்திகர்கள் கேட்டுவிடப் போவதில்லை. இறைவன் மீது முரட்டு பக்தி கொண்ட அயதுல்லா கொமேனி போன்றோரின் ஃபத்வாவிற்கு அஞ்சி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சல்மான் ரஷ்டியை மறக்கவியலாத நம்மூர் பகுத்தறிவுவாதிகளின் பயம் நியாயமானதுதான். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் சிந்தனை மரபில் உதித்த நம்மவர்களால் சக மனிதனை மாறுபட்ட கொள்கை கொண்டதாலேயே எப்படி வெறுக்கமுடியும்? வசு தைவ குடும்பகம்....-உலகம் ஒரு குடும்பம் என உலகளாவிய அன்பை போதிக்கும் அறநெறியைப் பின்பற்றும் இந்த தேச மக்கள் இறை மறுப்பாளரையும் போற்றவே செய்வர். அது பலவீனம் அல்ல. அதை பலவீனம் என நினைப்பவர்களே பலவீனர்கள்
No comments:
Post a Comment