Wednesday, March 20, 2013

காதல் மழையில் கரைந்துவிடு



என் காதல் பெருமழையில்
நனையும் சுகத்தை
அகந்தை குடைபிடித்து
ஏன் இழக்கிறாய்..?
செம்புலப் பெயல்நீர் போல
காதல் அடை மழையில் கரைந்துவிடு
காதலில் கரைந்து காணாமல் போவதே
முக்திநிலை யென்பதுவும் அறிகிலையோ...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment