வேண்டா உமி நீக்கி உயிர் வளர்க்கும் அன்னம் தரும்
தீண்டா உரலில் கட்டுண்டு தீவினைப் பதர் நீக்கி
சீண்டா அற்பனையும் சீருடைய சிற்ப மாக்காயோ
காண்டா மணி விளக்காய் நினை விளக்கி யருளாயோ
ஆண்டாளாய் நாயகி பாவத்தில் இலயித்தே நினைச்சேர
கூண்டோடு மமதையெலாம் பொசுக்கிடவே வாராயோ
மாண்டு மண்ணில் மறைந்தாலும் கண்ணா நின்பதமே
வேண்டும் மெய்ஞானப் பேரொளியில் கலந்திடவே யாண்டும்
# கருங்குளம் மா.முருகன்
நன்றி: படம் :Keshav Venkataraghavan
தீண்டா உரலில் கட்டுண்டு தீவினைப் பதர் நீக்கி
சீண்டா அற்பனையும் சீருடைய சிற்ப மாக்காயோ
காண்டா மணி விளக்காய் நினை விளக்கி யருளாயோ
ஆண்டாளாய் நாயகி பாவத்தில் இலயித்தே நினைச்சேர
கூண்டோடு மமதையெலாம் பொசுக்கிடவே வாராயோ
மாண்டு மண்ணில் மறைந்தாலும் கண்ணா நின்பதமே
வேண்டும் மெய்ஞானப் பேரொளியில் கலந்திடவே யாண்டும்
# கருங்குளம் மா.முருகன்
நன்றி: படம் :Keshav Venkataraghavan
No comments:
Post a Comment