தாயிற் சிறந்த கோயிலும் இல்லை..
---------------------------------
பாற்கடலில் உறையும் மாலவன் மீனாய் அவதரித்து
நீரில் முதல் உயிர் தோன்றியதை நினைவுறுத்த
பரிணாம மாற்றத்தில் நின் கருவறைப் பனிக்குடநீரில்
தெய்வமாய் உயிர் கொடுத்து வளர்த்திட்ட அன்னையே
கருவறை கொண்ட கோயிலினும் உயிர்ப்புள்ள
கருவறை கொண்ட தாயே நீயே நடமாடும் கோயில்
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment