தவிர்க்கவே முடியாத சூழலில் பிரிய நேரும்
காதலர்களுக்கு பிரிவின் வலி இருந்தாலும் எங்கிருந்தாலும் சிறப்பாக
வாழட்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பணம் பகட்டு என மயங்கி
காதலுக்கு துரோகம் இழைத்தால் காதல் நினைவுகள் இருந்தாலும் அத்தகைய இணை
மீதான காதல் மெல்ல மெல்ல அழிந்து போகிறது. காதல் என்பதே உள்ளது உள்ளபடி
நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே நிலைபெறுகிறது எனும் போது
மனைவியை கணவனை உள்ளன்போடு நேசிக்கத் தொடங்குகிறவர்கள் வாழ்வைப்
புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment