Saturday, March 9, 2013

நான் சுதந்திரமானவன்
அனாலும் நான் கட்டுண்டிருக்கிறேன்
பால்,இனம்,மொழி,தேசம்,உடல்,மனம்
எனும் தளைகளில் கட்டுண்டிருக்கிறேன்
அனைத்துத் தளைகளையும் தகர்த்து
பேரண்டம்போல் எல்லையில்லாது
விரிந்து அடி முடி காணா பரவெளியில்
கோடிச் சூரயப் பிரகாசத்தோடு சுயமறிந்து
சுதந்திர புருஷனாய் ஆதியும் அந்தமும் இலா
சுயப்பேரொளி வெளியாய் ஆவேன்.
தத் த்வம் அஸி....சிவோஹம்......அகம் பிரம்மாஸ்மி...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment