
எண்ணச் சிதறல்களை எனக்குள் குவித்து
ஆழ்ந்து மூழ்கி எனை இழக்கும்
வேளையில் மௌனமே என் மொழியானது.
பொருள் புரியா சொற்களுக்கு
சொற்களை கடந்த மோன மொழி தனிலே
புதிய பொருள் புரியக் கண்டேன்
நான் எனது நீ உனது எலாம் கடந்த
ஆதி பரவெளியில் மெய் நிலை சுயதரிசனத்தில்
பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாய் காலம் மரணமுற
களிநடம் புரியக் கண்டதெலாம் வெறுங்கனவாயாகுமோ
நனவையும் கடந்த சொல்லிலடங்கா உயர் நனவேயன்றோ....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment