ஈருயிர்கள் ஓருயிராய்
உருமாறும் முத்தத் தவத்தில்
பிரபஞ்ச மனைத்தும்
பொடிப் பொடியாகி மறைய
பேரின்பப் பெருவெளி
எல்லையில்லாது விரிய
என்னை நானும்
உன்னை நீயும் இழந்து
ஜீவன் முக்தர்களாகிறோம்.
காலாதீதமாய் ஓருயிராய்
இதழ் பிரியாதுயிர் பருகும்
முத்தத் தவத்தில்
நிலை கொள்வோம் என்றென்றும்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment