Sunday, March 24, 2013

முத்தத் தவம்



ஈருயிர்கள் ஓருயிராய்
உருமாறும் முத்தத் தவத்தில்
பிரபஞ்ச மனைத்தும்
பொடிப் பொடியாகி மறைய
பேரின்பப் பெருவெளி
எல்லையில்லாது விரிய
என்னை நானும்
உன்னை நீயும் இழந்து
ஜீவன் முக்தர்களாகிறோம்.
காலாதீதமாய் ஓருயிராய்
இதழ் பிரியாதுயிர் பருகும்
முத்தத் தவத்தில்
நிலை கொள்வோம் என்றென்றும்....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment