காதல் புதை குழியில்
மீளா போதையில் மெல்ல மெல்ல
எனை இழந்து நின் கரம்பற்றி
புதையுண்டு போகிறேன்.
சொர்க்கம் நரகம் இரண்டையும்
மாறி மாறி துய்த்துணரும் தருணம்
காதலிலன்றி வேறு எங்கு கிட்டும்...?
காதல் புதைகுழியிலிருந்து
மீண்டு வர விருப்பமில்லை எமக்கு...
அதன் அடியாழத்தில் ஓடும்
அமிழ்த நதியில் மூழ்கிக்
காலம் கடந்த மெய்த் தவத்தில்
சித்தி பெறுவோம் ஓருயிராய்....!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment