Sunday, March 24, 2013

கவியின் வித்து


என் கற்பனைக்கு
சிறகு கொடுப்பவள் நீ
உன் மீதான காதல்
என் மொழிக்கு
இளமை தந்து
துள்ளி வரும்
கவியருவியாய்க் கொட்டுகிறது.
பெண்ணே நீ
கவிஞனைப் பிரசவிக்கும்
கன்னித் தாய்.
ஆதியொடு அந்தமிலாக்
காதலும் கன்னித் தமிழும்
பால்ய சினேகித முடையவை போலும்.
ஒன்று வந்தால் இன்னொன்றும்
கூடவே வந்துவிடுகிறதே....!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment