
https://www.facebook.com/keshav.keshav?group_id=0
சீறும் புலியாய் திமிறி மயக்கும் மாயையை அரையணிந்து
மாறும் மாயப் பருப்பொருள் நுண்உள உலகெலாம் கடந்து
மாறாது எஞ்ஞான்றும் தோன்றி மறையா பேரின்ப வெளியே
பாராது எம்மை பரிதவிக்கவிட்டு சிவனேயென வாளாவிருந்தால்
தீராது எந்தன் வினைதரும் ஓயா மாயப் பிறப்பது வுமறியாயோ
வாராது வந்தெமை ஆட்கொள்வாய் என்றென்றும் பேரின்பே சிவமே
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment