உன் விழி
மோதி சிதறுண்ட
என் இதயத்தை
பொறுக்கிக் கொண்டு
எங்கே ஓடுகிறாய்?
எச்சில் தொட்டு
ஒட்டி ஒன்றாக்கி
உனதாக்கி விளையாடவோ...?
இதய மற்றவன் என
ஊர் தூற்றாதோ?
உன் மூச்சுக் காற்றில்
உயிர் பெற்று மீண்டும்
துடித்திடும் என்
இதயத்தைத் திருப்பிக்
கொடுத்துவிடு அன்றேல்
உன் இதயம் தந்தெனை
உயிர் பெற்றெழச் செய்....!!
No comments:
Post a Comment