பொங்கும் பாலில்
தெளித்த நீர் போல
என் விடாத காதல்
அடைமழைப் பொழிவில்
உன் திமிறிப் பொங்கும் திமிரும்
அடங்கிப் போனது
காதல் செய்த மாயத்தில்
என் விரல சைவில்
இயங்கும் சர்க்கஸ் புலியானாய்
புலியைப் பூனையாக்க
பெருங் காதலாலன்றி
வேறு எஃதால் கூடும்.....?
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment