Wednesday, February 20, 2013

வழக்குரைஞர்
வாதத் திறத்திலும்
பொய் சாட்சியங்களாலும்
நிரபராதியாக்கப் பட்ட
கொலைகாரனைக்
கண்டு கபடமின்றி
அன்னை தோள்
சாய்ந்து சிரிக்கும்
கொலை யுண்டவரின்
பிஞ்சுக் குழந்தையின்
வடிவில் இறைவன்
சிரிக்கிறான்..
வினை வலியது
மகனே
அது தரும்
வேதனைத் தீயில்
நீ வெந்து போவாயென

No comments:

Post a Comment