வழக்குரைஞர்
வாதத் திறத்திலும்
பொய் சாட்சியங்களாலும்
நிரபராதியாக்கப் பட்ட
கொலைகாரனைக்
கண்டு கபடமின்றி
அன்னை தோள்
சாய்ந்து சிரிக்கும்
கொலை யுண்டவரின்
பிஞ்சுக் குழந்தையின்
வடிவில் இறைவன்
சிரிக்கிறான்..
வினை வலியது
மகனே
அது தரும்
வேதனைத் தீயில்
நீ வெந்து போவாயென
வாதத் திறத்திலும்
பொய் சாட்சியங்களாலும்
நிரபராதியாக்கப் பட்ட
கொலைகாரனைக்
கண்டு கபடமின்றி
அன்னை தோள்
சாய்ந்து சிரிக்கும்
கொலை யுண்டவரின்
பிஞ்சுக் குழந்தையின்
வடிவில் இறைவன்
சிரிக்கிறான்..
வினை வலியது
மகனே
அது தரும்
வேதனைத் தீயில்
நீ வெந்து போவாயென
No comments:
Post a Comment