நாம் வாழும்போது நறுமணம் பரப்பி வாழ்கிறோம்.
வீழ்ந்த பின் வாடிப் போனாலும் துர்நாற்றம் வீசுவதில்லை. ஆனால்
இம்மானிடர்கள் புண்ணுக்குப் பொன் தகடு வேய்ந்தது போல வாழும்போது செயற்கையாக
மணமூட்டிக் கொள்கிறார்கள். வீழ்ந்த பின் வழியெங்கும் வீசும் துர் நாற்ற
அலைகளை மறைக்க நம்மை வீசியெறிந்து செல்கிறார்கள். வாழும் போதும் வாழும்
காலத்திற்குப் பின்னும் வையம் வாழ்த்த அன்பையும் ஈகையையும்
வாரியிறைத்தவர்கள் மிகச் சொற்பமே என இறுதி ஊர்வல வீதிகளில் இறைந்து
கிடக்கும் பூக்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன.
No comments:
Post a Comment