நிலவு:
நான் வளர்வது மில்லை
தேய்வது மில்லை.
இரவல் ஒளியென்றாலும்
முழுமையாக வீசிக்
கொண்டுதா னிருக்கிறேன்
வளர்வதும் தேய்வதும்
உங்கள் காட்சிப் பிழை
முழுமையான என்னையே
முழுமையாகக் காட்டாத
உங்கள் கண்களை மட்டுமே
நம்பும் நீங்கள் என்னையும்
உங்களையும் இயக்கும்
சுயஓளிப் பேரறிவாம்
இறையை உணர்வது எங்ஙனம்....?
No comments:
Post a Comment